”தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்”
முன்குறிப்பு::
the things which made me to think.. and Ink.. Many might be senseless.. Yet Sensible..
Tuesday, July 7, 2009 / Labels: பதிவர்வட்டம்
முன்குறிப்பு::
Wednesday, June 10, 2009 /
சில இழப்புக்களால் நீண்ட நாட்களாக எதையுமே எழுதாமல் இருந்த என்னை மீண்டும் எழுத நண்பர் பால்ராஜ் அடிக்கடி சொல்லுவார்.. இருந்தும் நான் எழுதவில்லை.. மனம் இல்லை என்று சொல்வது தான் சிறந்த வார்த்தையாக இருக்கும்.. மீண்டும் எழுதும் முதல் பதிவு இதுவாகத்தான் இருக்க வேண்டுமென்று ஒரு விடயத்தை வைத்திருந்தேன்..
நண்பர் பால்ராஜ், இவன இப்படியே விட்டா எழுதறதயே மறந்துவிடுவானென்று இந்த தொடர் பதிவில் என்னை இழுத்துவிட்டுட்டார்.. இந்த தொடரும் எனது மனதில் இருந்த பதிவுக்கு சிறிது ஒத்துப்போவதால்.. இங்கே..
1. உங்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
அ. செந்தில் குமார்... இது தானுங்க கவர்மெண்டுல நம்ம முகவரி.. செந்தில்/சென் - நட்பு வட்டத்தில் இந்த பெயர்.. மிகச்சமீபத்தில் நானே ஆசையா மாற்றியமைத்துக் கொண்டது.. செந்தில் குமார்.அசோக்.. அம்மா மற்றும் அப்பா ஆசையா பையானு தான் கூப்பிடுவாங்க.. அவங்க வேற எதும் சொல்லி கூப்பிடது போல எனக்கு ஞாபகமே இல்லை..
செந்தில்.. இது என் தாத்தா ஆசையா வைத்த பெயர் என்று அம்மா ஒரு முறை சொல்லி இருக்காங்க.. எங்க குடுபத்தில் எல்லாருக்கும் குமார்/குமாரி ஒட்டிக்கும்.. எனக்கும் ஒட்டிகிச்சு..
ஒவ்வொரு மனிதனுக்கும், உலகத்திலேயே அவனுக்கு இனிமையா கேட்குற சொல் அவன் பெயர் தான்.. அப்படி இருக்கும் போது, என் பெயர் எனக்கு பிடிக்காம போய்டுமா?? ரொம்ப பிடிக்கும்..
(குமாரு:: டேய்ய் உனக்கு பள்ளி பருவத்துல நண்பர்கள் வச்ச பேரு மறந்துபோச்சா??)
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
அவ்வப்போது..
3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
நம்ம கையெழுத்துக்கு நிறைய ரசிகர்களே உண்டு.. அட ஆமாங்க.. உண்மையத் தான் சொல்லறேன்.. ஆனா என்னைப் பொறுத்தவரை என் கையெழுத்து கொஞ்சம் கொஞ்சம் நல்லா இருக்கும்.. ஆனா பாருங்க பல நேரங்களில் கேவலமா இருக்கும்.. அது ஏனோ தெரியல, நம்ம கையெழுத்து always depends on the pen i use and the surface.. :-( (குமாரு:: உன் கையெழுத்த படிக்கறது எங்க தலைஎழுத்து, இதுல உனக்கு ரசிகள் இருக்காங்கன்னு ஏண்டா இப்படி பீலா விடற?)
4. பிடித்த மதிய உணவு என்ன?
காலை/மதிய உணவு.... அப்படி பிரிச்சு பாக்கறது இல்ல.. தஞ்சையில் அம்மா சமையல் சாப்பிடும் போது, அவங்களே பார்த்துக்குவாங்க.. இப்போ சென்னையில அந்த வேளை எது சாப்பிடனுமுனு தோணுதோ அத சாப்பிட்டுட்டு போய்டறது.. (ஒரு ஓட்டல் நடத்தறவன் பேசுற பேச்சா இதுன்னு குமாரு தலையில அடிச்சுக்கறான்)
பிகு: நமக்கு சாப்பாட்டுல நாட்டமில்லைன்னு மட்டும் யாரும் தப்பா நினைச்சுடாதீங்க.. அக்மார்க் தஞ்சாவூர்காரன்.. நல்லா வக்கன்னையா ரசிச்சு ருசிச்சி எல்லாத்தையும் வெட்டுவோம்ல.. அட ஒரு டம்ளர் சூட சுவையா காபி போதுங்க.. அதுக்கு ஈடு வேறு இல்லை..
5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நான் என்ன பத்தி ரொம்ப பெருமையா நினைத்துக்கொள்ளும் ஒரு விஷயம், எனக்கு வேண்டாதவங்க, என்னை பிடிக்காதவங்க, எனக்கு பிடிக்காதவங்க என்று இதுவரை கடவுள் புண்ணியத்தில யாரும் இல்ல..
(குமாரு:: டேய் அவங்க என்னா கேட்டாங்க, நீ என்னா சொல்லற??)
6. கடலில் குழிக்க பிடிக்குமா.. அருவியில் குளிக்க பிடிக்குமா??
யாரு குளிக்கறத பற்றி கேட்கறீங்க??
ஓ நான் குளிக்கறதா?? அருவி தான் நம்ம சாய்ஸ்.. சும்மா மடமட நீர் மேல வந்து விழுமே அப்போ அடையற சுகமே தனி.. ஒன்னுமே செய்யாம அப்படியே நின்னுகிட்டு இருக்கனும்.. ம்ம்ம்ம்
கடல்.. அமைதியா மணலில் உட்கார்ந்து, ஆர்ப்பரிக்கும் கடலை பார்த்துட்டே இருக்கனும்..
எதையோ தொலைத்து தேடற ஒரு பரபரப்பு காட்டுமே அலைகள், அதுகிட்ட அது எதை தஒலைச்சதுன்னு கேட்டு கண்டுபிடிச்சு குடுக்கணும்..
(குமாரு:: நாட்டாம, இவன்கிட்ட கேள்விய மாட்தி கேளு.. “குளிக்க பிடிக்குமா?” அப்படி கேளு..)
7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவணிப்பீர்கள்??
யாரை எதுக்கு பார்கிறோம் என்பதைப் பொறுத்தது அது..
பேசும் போது பெரும்பாலும் கண்கள் தான்.. அது தான் அவங்கள பத்தி நமக்கு சொல்லும்..
(குமாரு:: அப்போ சிறும்பாலும் எத பார்த்து பேசுவ??)
8. உங்ககிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன??
பிடித்தது:: எனக்கு பிடிக்காத விஷயங்களையும் பல நேரங்களில் அடுத்தவங்களுக்காக செய்யறது.. அத மகிழ்ச்சியா எடுக்கறது..
பிடிக்காதது:: ஆவ்வ்வ்வ்வ்... சோம்பலா இருக்கு.. அப்புறமா சொல்லட்டுமா??
(குமாரு:: முதல்ல மத்தவங்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காதுன்னு கேட்டு உறுப்படற வழிய பாரு)
9. உங்க சரி பாதிகிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது??
பிடித்தது:: நீண்ட நெடிய கால்கள்..
பிடிக்காத்து:: கால் கட்டை விரல் இரண்டும் கொஞ்சம் வளைந்து இருக்கும்..
சரி பாதினா என் கால்களைத் தானே கேட்குறீங்க??
(குமாரு:: நீ உறுப்படவே மாட்ட)
10. யார் பக்கத்துல இல்லாம இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்??
இதை நான் சாய்ஸ்ல விட்டுடறேன்..
11. இதை எழுதும்போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
சேப்பு..
12. என்ன பார்த்து, கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்??
அழகா கறுப்பு சட்டை போட்டு.. வெள்ளை உள்ளாடை வெளியில் தெரிய கலக்கலா இருக்கற என் கணிணி.. (வேற எத்த பார்க்கறது.. )
Mr. கந்தசாமியும் Ms. சுப்புலச்சுமியும் போடி.. போடான்னு சண்டை போட்டுகிட்டு இருக்கறத கேட்டுட்டு இருக்கேன்..
13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக மாற ஆசை?
Friday, January 23, 2009 / Labels: Photo, அரசியல், சமூகம்
சமீபத்தில் 111 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் கட்டாக் நகரில் திரு ஜானகிநாத் - திருமதி பிரபாவதி தேவி தம்பதிக்கு 9 வது மகனாக (மொத்த 14 குழந்தைகள்) சுபாஷ் பிறந்தார்..
தந்தை வழக்கறிஞர்.. ஆதலால் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைத்தது.. புத்திசாலி மாணவரான சுபாஷ், 1919 ஆம் ஆண்டு பள்ளியின் முதல் மாணவராக வெளிவந்தது.. பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் காலேஜில் BA (Philosophy) முடித்தது.. பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் இந்தியா ஆங்கிலேயரிடம் அடிமைபட்டிருப்பது எண்ணி மனம் வெதும்பியது.. பின்னர் இங்கிலாந்து சென்று சிவில் சர்வீஸ் முடித்தது அனைத்தும் வரலாறு..
தேசப்பிதா காந்தியடிகள் நிறுத்தியவர்களை எதிர்த்து இரு முறை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.. பின்னர், காந்தியடிகளுடனான மன வருத்தம் அதிகமாகவே, காங்கிரஸிலிருந்து வெளியேறி அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியைத் துவக்கினார்..
அகிம்சையினால் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் கிடைப்பது கடினம் என ஆணித்தரமாக நம்பினார்.. ஆயுத ஏந்தி பரங்கியரை எதிர்த்து போர் புரிந்தார்..
1947ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 18ஆம் நாள் ஜப்பானுக்கு வினானமார்க்கமாக செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் காலமானதாக அறிவிக்கப்பட்டது..
Monday, January 12, 2009 /




/ Labels: சமூகம்




.. Saturday, December 13, 2008 / Labels: Photo, பதிவர்வட்டம்