Tuesday, August 17, 2010

தஞ்சாவூர் மாலைகள் - சரம்2:மணி4

இது எந்திரன் சீஸன்.. இயந்திரமாகிவிட்ட வாழ்க்கையில எந்திரன் பற்றி பேசவில்லை (அ) இடுகை வெளியிடலன்னா நாம என்ன பிரபல பதிவர் லிஸ்டில் சேர்க்க மாட்டாங்க.. (இப்போ மட்டும் உன்ன சேர்த்துட்டாங்களா - குமாரு)

எந்திரன் படப்பிடிப்பு சென்னை சிறுசேரி சிப்காட் தொழிற்பேட்டையில் நடந்துச்சி.. தொழிற்பேட்டையில் எல்லா கம்பெனிகளையும் இணைக்கும் முக்கிய சாலையில் தான் படம்பிடிச்சாங்க.. படம் பிடிக்க சாலையை முழுக்க அடைச்சி போக்குவரத்திற்கு தடைவிதிச்சிட்டாங்க.. இதுல கொடுமை என்னன்னா, யாருமே அது பற்றி கேள்வி கேட்காம சிறமப்பட்டு சுத்தி சுத்தி போனாங்க.. இந்த கொடுமைகள் ஒரு புறம் இருக்கட்டும்..

அந்த படப்பிடிப்பில் கலந்துக்க வந்த நம்ம சூப்பர் நடிகரையும் ஒலக அழகியையும் பார்க்க கூட்டம்.. சாஃப்டுவேர் மக்களும் சேர்ந்துட்டாங்க.. அதில் ஒரு “ஆர்வம்”, நம்ம சூப்பரை தன் செல் ஃபோனில் படம் எடுத்து தனது நண்பர்களுக்கு ஈமெயில் மூலமா பகிர்ந்துகிட்டார்.. அது ஒரு குத்தமாய்யா?? அடுத்த வாரமே அந்த கம்பெனியில் வேலைப் பார்க்கும் எல்லாருக்கும் ஒரு சர்க்குலர் மெயில்.. அதில் “எண்டர்டெயின்மெண்ட் சாம்ராட்” சன் பிக்சர்ஸ் மற்றும் “உலக டைரக்டர்” சங்கர் கிட்ட இருந்து இந்த மாதிரி இந்த மாதிரி உங்க கம்பெனி ஆளு நாங்க படம் பிடிச்சதை படம் பிடிச்சிட்டாரு.. அது எங்க வேலை திருடறதுக்கு சமம்.. அந்த மெயில் அனுப்பற வேலையை நிறுத்திக்கோங்க.. இல்லாங்காட்டி நாங்க ஆக்‌ஷன் எடுப்போம்ன்னு டெரரா ஒரு கடிதம்..

ஏனுங்க, நீங்க ஒலக படம் எடுக்கும் போது இந்த பச்ச புள்ள என்ன சைடுல திருட்டுத் தனமா படம்பிடிச்சி திருட்டு வீடியோவா போடப்போகுது.. ஆசை பட்டு சூப்பரை படம் எடுத்துட்டாரு.. அவ்வளவு முடை பட்டுக்கறதுக்கு வீக் எண்டுல படம் பிடிக்க வேண்டியது தானே?? உங்களால எங்களுக்கு தான் இடைஞ்சல்.. நாங்க உங்களுக்கு இடைஞ்சலா??
எல்லாம் நேரம் தான்..

குமாரு:: டேய் நீ தலய பத்தி தப்பா பேசிட்டியா?? அதும் சாம்ராட் பத்தி வேற பேசறியா?? இருடி இன்னைக்கு உனக்கு ஆட்டோ தான்..
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தஞ்சாவூர் மாலைகள்:

இன்று நாம் அனேகமாக எல்லா இடங்களிலும் Suggestion & Comments புத்தகத்தை பார்க்க முடிகிறது.. பதிவர்களுக்கு பெரும் ஊக்கமே நம் இடுகைகளுக்குக் கிடைக்கும் பின்னூட்டங்கள் தான்.. திரு.வேணுகோபாலன் அவர்கள், அந்த காலத்திலயே தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கமெண்ட்ஸ் பெற்று அதனை ஆவனமாகவும் தொகுத்துள்ளார்.. இந்த கோப்பில் பற்பல அரிய ஆவணங்களைக் காண முடிகிறது..

அவரது வேலைப்பாட்டிற்கு அன்றைய பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகள்; பிரபலங்கள் அவரது கைவிணைக்கு அளித்த பாராட்டுக்கள் ஏராளமாக அவரது ஆவனத்தில் தொகுக்கப்பட்டுள்ளது..


1953ல் “தினமனி” 1953ல் “சுதேசமித்திரன்” 1954ல் “நாரதர்”


1954ல் “கல்கி” 1956ல் "The Mail"
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தெரிஞ்சே செய்யும் விதிமீறல்களைப் பெரும்பாலும் தவிர்க்க நான் முயன்று வருகிறேன்.. எந்த ஒரு ரயில் ஸ்டேஷனில் நான் பிலாட்ஃபார்ம் டிக்கெட் எடுப்பது அதில ஒன்னு. (கல்லூரியில் படிக்கும் போது அடித்த கூத்துகள் இதில் சேராது).. போன வெள்ளி கிண்டி ரயில்வே ஸ்டேஷன் போனேன். வழக்கம் போல், பிளாட்ஃபார்ம் டிக்கேட் எடுக்க கவுண்டரில் கேட்டதுக்கு அங்கிருந்த அதிகாரி, பிளாட்ஃபார்ம் டிக்கெட் ஸ்டாக் இல்லைன்னு சொன்னார். இது என்னங்க பதில்? டிக்கேட் செக்கர் கேட்டா நான் என்ன சொல்லறதுன்னு கேட்டதுக்கு அவர், “தம்பி, ஸ்டாக் இல்ல.. நாம் என்ன செய்யட்டும்? வேணும்னா 4ரூபா டிக்கெட் வாங்கிக்கோங்க”ன்னார்.. என்ன கொடுமை சார் இது??
  • டிக்கெட் ஸ்டாக் இல்லாமல் ஒரு ஸ்டேஷன் இருக்குமா??
  • டிக்கெட் ஸ்டாக் இல்லன்னா அதுக்கு பயணி / விடைகொடுப்பவர் பொறுப்பாக முடியுமா??
  • டிக்கெட் ஸ்டாக் இல்லைன்னா நாம் ஒரு ரூபாய் அதிகம் குடுத்து வேறு டிக்கெட் எடுக்கனுமா??
கடைசியில் 4ரூபா டிக்கெட் எடுத்து தான் நான் ஸ்டேஷனுள் சென்றேன்..

(குமாரு:: ஒரு 4 ருபா குடுத்ததுக்கு என்னா பில்டப் குடுக்கற நீ???)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தோற்க்கத்தான் ஆசைபடுவேன்
வெற்றியை நீ பெற..

காயப்படத்தான் விரும்புவேன்
காயப்படாமல் நீ இருக்க..


(குமாரு:: ஐயோ சாமி.. இந்த கொசுத் தொல்லை தாங்கலடா.. அடிச்சி விரட்டுங்கடா)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

டவுட்டு:
நம்மூர்ல, இங்கிலீஸில மொக்கை போடற பசங்கள “பீட்டர் பார்ட்டி”ன்னு சொல்லுறோமே, அது போல இங்கிலாந்துல தமிழ்ல பேசி பந்தா செய்யும் பசங்கள, “குப்புசாமி / முனுசாமி பார்ட்டி”ன்னு சொல்லுவாங்களா??

(குமாரு:: இன்னும் நீ அடங்கலியா??)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சிலர் பேசும் போது ஒரு கெத்தோட பேசுவாங்க..
இப்படித் தான் என்னுடன் வேலை செய்த நண்பர் ஒருத்தர் இங்கிலீஸில் பொலந்துகட்டுவாரு.. ஒரு விஷயம், அத்துடன் நிறுத்திக்கோன்னு சொல்லறது அவரு சொல்ல வந்ததைச் சொல்லி முடிச்சிட்டு “பீரியட்” அப்படின்னு சொல்லுவாரு.. (PERIOD - அப்படின்னா Full stop ன்னு அர்த்தமாமா). “இன்னும் 2/3 நிமிடத்தில்” இப்படி சொல்ல, “இன் அனதர் 120/180 செக்கண்ட்ஸ்” ன்னு சொல்லுவாரு (in another 120 /180 secs).. இப்படி நிறைய..

நானும் ஒரு கெத்தா இருக்கட்டுமேன்னு இன்னைக்கு குமாரு கிட்ட, நீ ஒன்னு ரெண்டுன்னு 120 எண்ணு அதுக்குள்ள நான் அங்க இருப்பேன் அப்படின்னு சென்னேன்.. 2ஆவது நொடி கூப்பிட்டான்.. என்னடான்னு கேட்டா, 1, 2, 0 எண்ணிட்டேன் அப்படின்னு சொல்லறான்.. ஹ்ம்ம்ம் நம்ம கெத்து எவனுக்கும் புரிய மாட்டேங்குது..

(குமாரு:: என்னய ஏண்டா வம்பிளுக்கற??)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ரைட்டு.. இப்போதைக்கு அவ்வளவு தான்.. படிச்சிட்டு கமெண்டுங்க.. ஒரு எழுத்தாளன வளர்த்த புண்ணியம் உங்களுக்கு சேரும்..
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



Wednesday, August 11, 2010

கை தானம் செய்யலாம் வாங்க!!

தானங்களில் சிறந்தது அன்னதானம் என்று பொதுவாக சொல்வது உண்டு..
பலரது வாழ்க்கை பற்பலரது ரத்த தானத்தினால் பிழைத்துள்ளது.. கண்ணப்ப நாயனார் குடுத்த ஐடியாவைப் பின்பற்றி மருத்துவ நிபுனர்கள் கண் மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் பலரது கண்களுக்கு ஒளி ஏற்றி வைத்தனர். பின்னர் நடந்த மருத்துவ புறட்சியினால் இன்று கண் மட்டுமல்ல, சிறுநீரகம், நுரையீரல் முதல் இருதயம் வரை அறுவை சிகிச்சையின் மூலம் மாற்று உறுப்புகள் பொருத்தி சிகிச்சையளிக்கப்படுகிறது.

விபத்து அல்லது நோயினால் பாதிப்பட்டு மூலைச் சாவு நிலையை அடைந்தோரின் உறுப்புகள் தானம் செய்யும் விழிப்புணர்வு சமீப காலமாக வளர்ந்துவருவது வரவேற்கத்தக்கது..

மதுரை அப்போலோ மருத்துவணையில் எலும்பு மாற்று அறுவைசிகிச்சை பிரிவில் கண்ஸல்டண்டாக உள்ள டாக்டர் டெரன்ஸ் ஜோஸ் ஜெரோம் வியப்பூட்டும் தகவல் ஒன்றைத் தருகிறார்..

பிற உறுப்புகளைப் போல் “கை”களையும் தானம் செய்ய முடியுமெனவும், உலக அளவில் இது வரை 50 பேருக்கு இது போல் மாற்று கைகள் பொருத்தப்பட்டுள்ளதாவும் கூறுகிறார். இது அமேரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடந்துள்ளது.. ”மைக்ரோ சர்ஜரி” என்னும் தொழில்நுட்பம் மூலம் இது சாத்தியமாவதாகக் கூறுகிறார்.
மகிழ்ச்சியான விஷயம், இப்போது இந்தியாவில் இந்த “மைக்ரோ சர்ஜரி” தொழில்நுட்பம் மதுரை அபோலோ மருத்துவமணையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிறவியிலேயே, விபத்து / இயந்திரத்தில் சிக்கி மணிக்கட்டுப் பகுதியை ஒருவர் இழந்துவிட்டால் துண்டிக்கப்பட்ட கையை திரும்பவும் பொருத்தமுடியும். அதற்கு துண்டிக்கப்பட்ட அந்த கையை ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றி ஐஸ் பெட்டிக்குள் வைத்து கொண்டு செல்ல வேண்டுமாம்..

இன்னொரு வழி “ட்ரான்ஸ்பிளாண்டேஷன்”.. அதாவது, தானமாகக் கைகளைப் பெற்று “மைக்ரோ சர்ஜரி” மூலம் பொருத்துவது. ரத்தம், சிறுநீரகம் போல மூளைச் சாவு அடைந்தோரின் கைகளைத் தானமாகப் பெற்று தேவைப்படுவோருக்கு பொருத்தலாம்.


டிஸ்கி 1:
டாக்டர் டெரன்ஸ் என் நண்பர், என்னுடன் படித்தவர் என்பதில் பெருமையாக இருக்கு.. (சரி.. சரி.. அவரு படிச்சாரு.. நான் படிக்கல)
டிஸ்கி 2:
தமிழ் சினிமாவில் ஹீரோயின் கையை வில்லன் பிடித்து இழுப்பார்.. அம்முனியோட போதாத காலம், கை வில்லனோட போயிடும்.. உடனே நம்ம ஹீரோ ஓடி போயி தன் கையை வெட்டி வந்து ஹீரோயினுக்கு பொறுத்துவாரு.. இது போன்ற காட்சிகள் வருமேயானால், கம்பெனி பொறுப்பேற்காது..


Tuesday, August 10, 2010

தஞ்சாவூர் மாலைகள் - சரம்2:மணி3

கடந்த வாரம் என்னமோ தெரியல.. வழக்கத்துக்குமாறா நல்லாவே போயிடுச்சி..
முதல் முறையா Skywalk Mall க்குப் போனேன்.. அங்க பார்க்கிங் சிஸ்டம் நல்லா இருக்கு.. நாமே டோக்கன் எடுத்துக்க ஒரு வெண்டிங் மெஷின் இருக்கு.. ஆனா அதுல நாம காசு போடத் தேவையில்லை.. நாம வண்டிய பார்க் செய்துவிட்டு நாள் முழுக்க Mall முழுக்க சுத்திட்டு வரலாம்.. வண்டிய எடுத்துட்டு வெளிய வரும் போது Toll gate இருக்கு.. அங்கனத் தான் வசூல் வேட்டை.. நல்ல சிஸ்டம்..
பொதுவா நாம சினிமா போகிறபோது அவரசத்துல இருப்போம்.. அப்பத் தான் பார்க்கிங்கல இவனுங்க தொல்லை தாங்காது.. இது நல்லாவே இருக்கு..
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தஞ்சாவூர் மாலைகள்:




இது போன்ற வேலைப்பாட்டுடன் கூடிய மாலைகள் இன்று கிடைப்பது அரிது.. திரு.வேணுகோபாலன் அவர்களுக்குப் பின் இவ்வளவு வேலைப்பாட்டுடன் அவரது மகனால் கூட செய்ய இயலவில்லை.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


சமீபத்தில் தினசரி ஒன்றில் நடிகர் சூர்யா அடுத்து நடிச்சிகிட்டிருக்க "7ஆம் அறிவு" படம் பற்றி ஒரு செய்தி வந்திருந்தது.. அதில் சூர்யா சர்கஸ் வீரராக நடிக்கிராருன்னும் அதுக்காக அவர் சிறப்பு பயிற்சி எடுத்துக்கிட்டாருன்னும், இதில் அவரே எல்லா சீன்களயும் டூப் இல்லாம நடிச்சி இருக்காருன்னும் போட்டு இருந்துச்சி..
சூர்யா இவ்வளவு மெனக்கெட்டு பயிற்சி எடுத்துக்கிட்டு ஒவ்வொரு படத்திலயும் தன் நடிப்பை மெருகேற்றி வந்திட்டு இருக்கார். அந்த டெடிகேஷனுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

அதே நேரம்.. நம் இளைய தலைமுறை நடிகர்கள் இப்படி அவங்களே ரிஸ்க் எடுக்க ஆரம்பிச்சிட்டா, ஸ்டண்ட் நடிகர்கள் நிலை என்ன ஆகும்?? இப்படித் தான் முன்ன எல்லாம் ஒரு படத்துக்கு ஒரு குத்து பாட்டு இருக்கும். அதுல நடனமாட ஒரு சில பேர் இருந்தாங்க.. சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி, குயிலி போன்றோர்.. ஆனா, இப்பல்லாம் அந்த இடத்தை ஹீரோயின்களே நிறப்பிடறாங்க.. இது துணை நடிகர்கள், ஸ்டண்ட் ஆர்டிஸ்ட் இவங்க வயித்துல அடிக்கற மாதிரி இல்லயா??
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நல்லவனுக்கு நல்லவன் படத்தில் வரும் “உன்னைத் தானே தஞ்சமென்று” பாடல்..



இதுல வரும் வரிகள்..
உலகம் எனக்கென்றும் விளங்காதது..
உறவே எனக்கின்று விலங்கானது..

அடடா முந்தானை சிறையானது..

இதுவே என் வாழ்வின் முறையானது..


பாறை ஒன்றின் மேலே.. ஒரு பூவாய் முளைத்தாயே..
உறவுக்கு உயிர் தந்தாயே..
நானே எனக்கு நண்பன் இல்லையே..
உன்னால் ஒரு சொந்தம் வந்தது..


இந்த வரிகள்ல, படத்தோட கருவையே சொல்லிட்டாரு கவிஞர்.. அது மட்டும் இல்ல.. மனைவியின் மகத்துவத்தைச் சொல்லி இருக்காரு..

தங்கமணிகள் வாழ்க..

(அப்பாடா.. இத சொதப்பாம சொல்ல என்ன கஷ்டப் பட வேண்டி இருக்கு)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நாம சில விஷயங்கள் நினைப்போம், கணக்கு போடுவோம்.. உங்களுக்கு எப்படின்னு தெரியல, நமக்கு எப்போதுமே எக்குத்தப்பாத் தான் போகும்.. ஹ்ம்ம்ம் அத விடுங்க.. இவங்க சொன்னத பாருங்க..

“இந்த உலகத்துக்கு மொத்தமா ஒரு 5 கணினி போதுமென்று நினைக்கிறேன்”
-- தாமஸ் வாட்சன், IBM Chairman, 1943.

“வீட்டில் கணினி பயன்படுத்தும் அளவுக்கு தேவை ஒன்றும் இல்லை”
-- கென் ஆல்சன், Founder Chariman of Digital Equipment Corp, 1977.

“640K ஒருவருக்கு போதுமானது”
-- பில் கேட்ஸ், 1981
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இவாபொ:

In the battle between the rock and the stream, the stream always wins, not out of strength but of perseverance.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சமீபத்தில் நண்பர் வீட்டில் இருந்தேன்.. காலிங் பெல் சத்தம் கேட்கவே, யாரென எட்டிப் பார்த்தேன்.
வந்தவர்: “ஐ.பி. இருக்காரா?” (நண்பரை ஐ.பி. என்று அழைப்போம்)
நான்: “இருக்காரு.. உள்ள வாங்க..”
வந்தவர்: “பரவால்லங்க.. இருக்கட்டும். அவர கூப்பிடுங்க..”
நான் ஐ.பி. யை கூப்பிட,
ஐ.பி.: “வா மணி.. என்ன விஷயம்??”
வந்தவர்: “ஒரு கால் செய்யனும் ஐ.பி. phone கிடைக்குமா??”
ஐ.பி.: “என்ன மணி இப்படி கேட்டுட்ட?? இது உன் phone தானே.. பேசிக்க மணி..”
(“இது அவன் phoneஆ” மனதில் நினைத்துக்கொண்டேன்)
பேசி விட்டு, வந்தவர்: “ஐ.பி. வாடகை என்னைக்கு
நான் வாங்கிக்க?”
ஐ.பி.: “என்ன மணி? இன்னைக்கு தேதி 20 தானே?? எப்போதும் 10 தேதி போல தானே தருவேன்..”
வந்தவர்: “சரி ஐ.பி. நான் வரேன்..”
மணி போனவுடன்..
நான்: “யாரு ஐ.பி. இது??”
ஐ.பி.: House Owner பா..”
நான்: “Phone கேட்டாரே??”
.பி.: “ஆமா.. இது அவனோடது தான்.. ”
நான்: “அது சரி.. அதுக்குள்ள வந்து வாடகை கேட்கறாங்க??”
.பி.: “அட நீ வேற.. அவன் கேட்டது இந்த மாச வாடகை.. நாம தஞ்சாவூர்ன்னு அவனுக்கு தெரியும்.. தஞ்சாவூர் ஆளுங்கனாலே இங்க எல்லாருக்கும் கொஞ்சம் டெரர் தான்.. ”

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ரைட்டு.. நான் கிளம்ப நேரம் வந்திடுச்சி.. படிச்சுட்டு திட்டறதுக்கோ, மேலும் விவரங்களுக்கோ கமெண்டுங்க..

சந்திப்போம்!!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Tuesday, August 3, 2010

தஞ்சாவூர் மாலைகள் - சரம்1:மணி2


கடந்த வாரம் தஞ்சாவூர் மாலைகள் தொடருக்கு அமோக ஆதரவு தந்து அதனை மாபெரும் வெற்றி பெறச் செய்த பாசக்கார மக்களுக்கு நன்றிகள்.. (குமாரு:: அடப்பாவி.. படிங்க படிங்கன்னு நீ ஒவ்வொருத்தர்ட்டயும் கெஞ்சினது எனக்கு தானே தெரியும்)

நேரிலும், அலைபேசியிலும், மின்னஞ்சல், இவ்வளவு ஏன் தந்தி எல்லாம் அனுப்பி நண்பர்கள் தந்த உற்சாகத்தில் ”தஞ்சாவூர் மாலைகள்” தொடர்கிறது.. (குமாரு:: டேய்.. உன்ன தேடி ஆட்டோ வந்ததே அத சொல்லலியா நீ)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தஞ்சாவூர் மாலைகள்:

திரு. வேணுகோபாலன் அவர்கள் மாலைகள் மட்டுமல்லாது சந்தணம், ஜவ்வாது, ஏலக்காய், கிராம்பு போன்றவற்றைப் பயன்படுத்தி அவரின் கற்பனைக்கு எட்டியவாரு பற்பல அலங்காரப் பொருட்களை செய்துள்ளார்..



திருமண வரவேற்பில் மணமக்கள் கைகளில் தவழும் கலைநயமிக்கச் செண்டு..

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இன்று நாட்டில இருக்கற விலைவாசியில் ஒரு மசால் வடை என்ன விலை?? உற்பத்தி செலவு என்ன ஆகுது?? எனக்கு தெரிஞ்ச வரை, ஒரு மசால் வடை செய்ய, குறைந்தது `2 ஆகும். பொதுவாக விற்கப்படும் விலை `2.50 அல்லது `3

நாட்டு நடப்பு இப்படி இருக்கும் போது, ஒரு கடையில் அருமையான சுவையோட மசால் வடை `1 க்கு கிடைக்கிறது.. அதுவும் நம்ம சென்னையிலனா நம்ப முடியுதா?? ஆமா, சென்னை சோழிங்கநல்லூர்ல ஒரு மளிகைக் கடையில தினமும் மசால் வடை செய்து விற்கிறார்கள்.


அந்த கடைக்கார அம்மாகிட்ட எப்படிம்மா உங்களுக்கு கட்டுபடியாகுதான்னு கேட்டதுக்கு அவர் சொன்ன பதில்.. “இப்போ தான்ப்பா `1 ஆக்கினேன்.. இதுவரை 50பைசா தான் இதுக்கு விலை வச்சிருந்தேன்.. லாபமோ நஷ்டமோ வடை நல்லா இருக்குன்னு நிறைய பேர் ரெகுலரா வருவாங்க. அதனால நானும் செய்துகிட்டு இருக்கேன்”

ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்ம் இப்படியும் மனிதர்கள் இன்னமும் இருக்காங்க...
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பொதுவாகவே விதிமீறல் அதிகம் நம்ம கண்ணில் படறது, சாலைகளில் தான். அப்பப்பா.. என்னமாப் படுத்தறானுங்க.. மத்தவங்களப்பத்தி கவலையே கிடையாது.. யார் எக்கேடு கெட்டு போனா எனக்கென்ன, நான் முன்ன போகனும்ங்கற நினைப்பு தான் எல்லாருக்கும்.. இவனுங்க போகிற வருகிற அவசரத்தைப் பார்த்தா, நாட்டோட தலையெழுத்தயே மாத்த ஓடிட்டு இருக்கற மாதிரி இருக்கு..



மிகவும் நெருக்கடியான வேளச்சேரி - விஜயநகர் பேருந்து நிலைய சந்திப்பு. தாம்பரம் பக்கமிருந்து விஜயநகர் வரும்போது, அந்த சந்திப்பில் வலது புறம் திரும்பவோ, U-turn எடுக்கவோ கூடாது.. இவன் என்ன செய்யறான் பாருங்க..

எத்தனை சட்டம் வந்தாலும் நம்ம ஆள அசைக்கமுடியாது..
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இவாபொ:

வாழ்க்கைப் பிடிக்கவில்லையா, தற்கொலை செய்துக்கொள்..
ஆனால், தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு உனக்கு தைரியம் இருந்தால், வாழ்ந்தே பார்..
-- அலெக்ஸாண்டர்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த மீடியாக்களோட ரவுசு தாங்க முடியலடா சாமி..
பொதுவாகவே இப்பல்லாம் ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகப் போகுதுன்னா, ஒரு மாசம் முன்னாடியே அலப்பறைய ஆரம்பிச்சிடுறாங்க இந்த மீடியாக்கள் எல்லாம்.. அதுவும் ஒரு சில மீடியாக்கள் பற்றி சொல்லத் தேவையே இல்லை.. ஆடியோ ரிலீஸ் இப்பல்லாம் நிறைய டிவி சேனல் ஸ்டூடியோவில் தான் நடக்குது.. அப்படி இருக்கும் போது, இந்தியாவே எதிர்பார்க்கும் ஒரு படம்.. அதுவும் சூப்பர் ஸ்டார் படம்.. சொல்லத் தேவையே இல்லை..

எந்திரன் ஆடியோ ரிலீஸ்.. அதுவே ஒரு வெற்றி விழாவை விட கோலாகலமா நடந்திச்சி.. மறுநாள் தினகரன் பத்திரிக்கையில் வந்த விளம்பரம்.. ”ஆடியோ ரிலீஸ் பற்றிய செய்திகளும் படங்களும் நாளை மறுநாள் தினகரனில்”ன்னு.. இது வரை ஆடியோ ரிலீஸ் நாளை / மறுநாள் இப்படி தானே விளம்பரம் வந்துட்டு இருந்தது??? எப்போலேந்து இப்படி செய்திகளுக்கும் படங்களுக்கும் எல்லாம் விளம்பரம் குடுக்க ஆரம்பிச்சீங்க??

சரி.. அத விடுங்க..

அவங்க டிவியில அத ஒளிபரப்ப போறாங்களாம்.. அதுக்கு என்னா பில்டப்புடா சாமி..
சத்தியமா சொல்லறேன்.. முடியல..

சங்கர் ஐயா.. இப்படி மிகுந்த எதிர்பார்ப்புகளுடன், அலப்பறையோட வந்த பல படங்கள் வந்த தடம் தெரியாம ஓடிடிச்சி,., இவ்வளவு செலவு செஞ்சி எந்திரன் எடுத்திருக்கீங்க.. பார்த்து..
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சமீபத்தில் ஒரு நாள், டீக்கடையில் நான்.. பக்கத்தில இரண்டு பேர் ரொம்ப தீவிரமா ஏதோ பேசிட்டு இருந்தாங்க..
நபர் 1: சார் இன்னைக்கு என்ன தேதி??
நான்: 28
நபர் 1: 7வது மாசம் தானே??
நான்: ஆமாங்க (என்னடா இப்படி கேட்கறாரு.. ஒரு வேளை நம்ம சோதிக்கிறாரோ)

உடனே அவரு அந்த பக்கம் திரும்பிட்டாரு..

நபர் 1: மச்சி.. இன்னைக்கு 27ஆம் தேதியாம்..
நபர் 2: ஓ அப்படியா?? நான் ஒரு 25 அல்லது 26 தான் இருக்குன்னு சந்தேகப்பட்டேன்..

இந்த பக்கம் நான்

&%*#^@!((^&&%*#^@!((^&

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ரைட்டு.. இப்போதைக்கு நான் அப்பீட்டு.. அப்புறமா ரிப்பீட்டு..
படிச்சிட்டு, உங்க மனசுக்கு படறத சொல்லிட்டு போங்க..

சந்திப்போம்!!





Monday, July 26, 2010

தஞ்சாவூர் மாலைகள் - சரம்1:மணி1



தஞ்சாவூர் என்றவுடன் நினைவுக்கு வருவது பிரம்மாண்டமான பெருவுடையார் ஆலயம்.. மேலும், டிகிரி காபி, தஞ்சாவூர் ஓவியம், தலை ஆட்டி பொம்மை மற்றும் தஞ்சாவூர் மாலைகள்..

தஞ்சாவூர் மாலை என்றே சிறப்புடன் அழைக்கப்படும் செயற்கை மாலைகள் அலங்கரிக்காத பிரபலங்களே இந்தியாவில் இல்லை என்றே சொல்லலாம்.. காந்தி, நேரு, இந்திரா, பெரியார், காமராஜர், அண்ணா, MGR, கலைஞர், கஷ்மிர் முன்னாள் இளவரசர், என்று பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். மகாராணி எலிசபெத் முதல், அயல் நாட்டுத்தூதுவர்கள் வரை அலங்கரித்துள்ளது தஞ்சாவூர் மாலைகள்.. இளவரசர் சார்லஸ் - டயானா திருமணத்தில் கூட தஞ்சாவூர் மாலைகளுக்கு அழைப்பு வந்திருந்தது என்றால் அதன் சிறப்பு நமக்கு புரியும்..

தஞ்சாவூர் மாலைகளை உருவாக்கியவர் அமரர் திரு. வேணுகோபால் நாயக்கர் அவர்கள்.. அவர் தம் கற்பனையில் மலர்ந்தவையே இன்று தஞ்சைக்கு ஒரு அடையாளமாக வளர்ந்துள்ளது..

சந்தணம், ஜவ்வாது, ஏலக்காய், நெட்டி, கிராம்பு, நெல், பணம், ஜரிகை என்று பற்பல பொருட்கள் கொண்டு செய்யப்படும் இம்மாலைகள் மிகுந்த வேலைப்பாடுகளுடன் மிக அழகாக இருக்கும்..


சந்தண மாலைகள்..



அன்று.. இன்று..





இந்த கைகள் தான் என்ன தவம் செய்தன


வேறுபட்ட வண்ண வண்ண, அழகிய தஞ்சாவூர் மாலைகளைப் போலவே, நான் பார்த்த, கேட்ட, படித்த, சுவைத்த, மேலும் என்னை பாதித்த அனைத்தும் இப்பகுதியில் இடம் பெறும்..
-------------------------------------------------------------------------------------------------

தஞ்சையில் இருந்து குடந்தை வரை இன்று செல்ல ஒரு வேலை..
என்ன கொடுமைங்க.. தஞ்சையிலுருந்து கிளம்பி கருந்தட்டாண்குடி தாண்டி அய்யம்பேட்டை வரை சுமார் 19கிமீ. வழி நெடுக சாலையின் இரு பக்கமும் வயல்களை அழிச்சுட்டாய்ங்க.. அங்க அங்க போர்டப் போட்டு பிளாட்டு போட்டு கூறு போட்டு வித்துட்டு இருக்காய்ங்க.. கண்ணுக்கு முன்ன இப்படி மாறுவதைப் பாக்க ரொம்பவே வேதணையா இருக்கு.. அய்யம்பேட்டை சமீபத்துல எல்லாம் ஒரு வருடம் முன்பு வரை காய்கறி, பயிர் வகைகள் விளைந்த இடம் எல்லாம் இன்னைக்கு செம்மண் அடித்துச் சமன் செய்யப்பட்டு, கூறுபோட்டுகிடக்கு.. ஏற்கனவே அங்க அங்க கல்லூரிகள் முளைச்சி இருந்திச்சி.. இப்போ எல்லாம் போச்சி..

இப்படியே போச்சின்னா, இன்னும் 50 வருடங்கள் கழித்து என்னத்த சாப்பிடபோறோம்ன்னு தெரியல..
-----------------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சையில் புதுசா Trafic Signal போட்டு இருக்காங்க.. அது அமைத்து 6 மாசம் ஆச்சுடான்னு யாரோ சத்தம் போடறது கேடுது.. தஞ்சை 1000 வருடம் தாண்டிய நகரம், விரிவாக்க முடியாத சிறிய சாலைகள்.. இருந்த போதிலும், மக்கள் சிகப்பு விளக்கு எரியும் போது, கோட்டைத் தாண்டாமல் ஒழுங்கா நிக்கறாங்க.. அதுல பாருங்க, இடது பக்கம் போகிற வாகணங்களுக்கு வழிவிட்டு நிக்கறாங்க..
இன்று இப்படித்தான்.. நானும் நண்பரும் சிக்னல் ரெட் எரியுதேன்னு மரியாதையா, பவ்யமா நின்னுட்டு இருந்தொம்.. மைக்கில் ஒரு குரல், ”தம்பி ஆரெஞ்சு டி.சர்ட்.. லெஃப்டுல போறவங்களுக்கு வழிவிட்டு ரைட்டுல நில்லுங்க..” நானும் நண்பரும் யார் அதுன்னு சுற்றும்முற்றும் பார்த்தோம்.. மீண்டும் மைக்கில் அதே குரல்.. “தம்பி உங்கள தான் சொல்லறேன், நீங்க எங்க சுத்தி பார்க்கறீங்க?? நகருங்க”.. அப்போ தான் புரிந்தது.. அவிங்க சொன்னது எங்களத் தான்னு.. அசடு வழிஞ்சிட்டே வண்டியத்தள்ளினோம்..

ம்ம்ம்ம்.. தஞ்சாவூர்காரங்க இன்னும் சென்னைக்கு வரல போல.. சென்னைக்காரங்க இன்னும் தஞ்சைக்கு வரல போல.. ரைட்டு.. நல்லது நடக்கட்டும்..
-----------------------------------------------------------------------------------------------------------------------

இவாபொ:

Whether you like it or not, everything that is happening at this moment is a result of the choices you have made in the past. - Deepak Chopra
-----------------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சை நகரில் ஒரு இண்டர்நெட் கபேயிலும் வெப் கேமரா இல்லங்க..
ஆனா பாருங்க, எல்லா கபே வாசலிலும் போர்டு வச்சி இருக்காங்க..
Browsing, Voice - Chatting, Video - Chatting, Horoscope, Email Checking, Ticket booking என்று..

இன்று காலை தஞ்சையில் பிரபலமான ஒரு நெட் செண்டருக்குச் சென்றிருந்தேன்.. ரயில் டிக்கெட் பிரிண்டு எடுக்க.. அங்கு ஒரு 16/17 வயது சிறுவன் வந்தான்.. இன்னாரு அனுப்பினாங்க.. இந்த CDல இருக்கறத 3 காபி போட்டு தரச்சொன்னாங்க.. அப்புறம் இந்த பேப்பரில் இருக்கற s/w download செஞ்சி தரச் சொன்னாங்கன்னு சொன்னான்.. அந்த பேப்பர் நம்ம கண்ணுலயா படனும்?? பட்டுத்தொலைச்சிடிச்சே.. அதுல எழுதியிருந்த அரிய s/w - Nokia PC Suit..

நம்ம நண்பர்.. நெட் செண்டர் உரிமையாளர்.. “சரி தம்பி. 1 மணி நேரம் சென்று வாங்க, ரெடியா இருக்கும்..
அந்த சிறுவன், “எவ்வளவு அண்ணா ஆகும்??
நம்ம நண்பர்.. “3 CD write செய்ய, 120 ரூபா.. இந்த s/w download செய்ய, 40 ரூபா.. மொத்தம் 160 ரூபா வாங்க்ட்டு வந்துடுங்க
அந்த சிறுவன், “சரிண்ணே

நான் “&%*#^@!((^&
(மனசுக்குள்.. அட பாவிகளா.. 6 வருஷம் முன்ன நான் நெட் செண்டர் ஆரம்பிக்கலாமுன்னு சொன்ன போது, அதெல்லாம் இனி ஓடாதுன்னு சொன்ன என் ஆருயிர் நண்பன் மட்டும் என் கையில கிடைச்சான்.. )
-----------------------------------------------------------------------------------------------------------------------

ரைட்டு.. நமக்கு பிடிச்சத சொல்லியாச்சி..
படிச்ச நீங்களும் உங்க மனசுக்கு படறத சொல்லிட்டு போங்க..

சந்திப்போம்!!

Related Posts with Thumbnails