Tuesday, November 25, 2008

உயிரே உனக்காக..


மோனாலிசாவைப் பார்த்ததில்லை..
ஊமைச் சிரிப்புக்கு
அர்த்தம் புரியவில்லை.. 

ஆனால் அன்பே

ஒவ்வொரு முறை
நீ 
ஒன்னுமில்லை
எனும் போதும் 
என் இதயம் படபடக்கிறது
உன் மனதில் ஏதோ உள்ளதென்று..

குழந்தையும் தெய்வமும்
ஒன்றென
கூறக்கேட்டேன்..
குழந்தையும் நீயும்
ஒன்றென
உணர்ந்தேன்..

என்னை விடவும் 
உன்னை நேசித்தேன்
உன்னை விடவும் 
உன்னை நேசிக்கிறேன்

உன்னை விடவும் 
துணியேன்
உன்னை விட்டு
பிரியேன்.. 

8 comments:

கார்க்கி said...

வொய் ப்ள்ட்? சேம் ப்ளட்..

நல்லயிருக்குப்பா..தொடர்ந்து எழுது

Ŝ₤Ω..™ said...

நன்றி சகா..
பிளட் எல்லாம் ஒன்னுமில்ல.. மனதில் தோன்றியது வார்த்தைகளாக..
அவ்வளவே..

K.Ravishankar said...

நண்பரே,

நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்.

இன்னும் கூட நல்ல எழுதலாமே.இது மாதிரி நெறைய வந்து விட்டதே

என் வலைக்கு வாருங்கள்.கவிதை/கதை/கட்டுரை படியுங்கள் கருத்து சொல்லுங்கள்

Ŝ₤Ω..™ said...

நன்றி ரவி..
உங்கள் வலையில் படித்துவிட்டு கண்டிப்பாக கருத்து சொல்கிறேன்..

K.Ravishankar said...

Ŝ₤Ω.,

ஒன்று மறந்து விட்டது. கிழ் உள்ள
வலையில் போய் பாருங்கள்.

1.veenaapponavan.blogspot.com
(surrealastic கவிதைகள் )

2.manoharggs.blogspot.com
(குழந்தையும் தெய்வமும்) கவிதை.

Akila said...

Nice kavidhai...

Ŝ₤Ω..™ said...

@akila..
இது கவிதை என்ற ஒரு வார்த்தைக்குள் அடக்கமுடியாத என் உணர்வு..

Akila said...

//உன்னை விடவும்
துணியேன்
உன்னை விட்டு
பிரியேன்..///

சூப்பரா இருக்கு...

Related Posts with Thumbnails