Thursday, October 23, 2008

இரு தளங்கள்..

யாமறிந்த இணைய தளங்களிலே இது போல் கண்டதில்லை..

அண்மையில் சென்னை மின்சார வாரியம், மின் கட்டணம் செலுத்த தனது இணையதளத்தில் வசதி செய்தி தந்தது நாம் அனைவரும் அறிந்ததே.(www.
tneb.in/ )

நாம் கட்டணம் செலுத்த, நாம் அந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில் ஒரு விடயம்.. என்னைப் போல் வாடகை வீட்டில் வசிப்போரும், மின் அட்டையில் உள்ள இணைப்பு எண்ணைக் குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த மாதம், நான் இணையத்திலேயே கட்டணம் செலுத்திவிட்டேன்.. முன்பெல்லாம் எனது நண்பர் உதவியை நாடினேன், அல்லது அலுவலகத்தில் ஒரு மணி நேரத்துக்கு பல் இளிக்க வேண்டி இருக்கும்..

மின்சார வாரியத்துக்கு என் நன்றிகள்..

இப்போது நான் சொல்ல வந்த விடயம் அது அல்ல.. மின்சாரவாரிய இணையத்தில் நாம் பதிவு செய்யும் போது கேட்கப்படும் கேள்விகளில் என்னை மிகவும் கவர்ந்தது..




இது ஒரு நல்ல ஆரம்பம்.

திருநங்கைகள் இது நாள் வரை தரம்தாழ்த்தியே நடத்தப்பட்டனர். இன்றும் அது தான் நடக்கிறது.. நம் ஊடகங்களும், திரைப்படங்களும் அவர்களை ஒரு கேலிப் பொருளாகவோ அல்லது வியாபார நோக்கிலேயோ தான் பயன் படுத்திவந்துள்ளனர். பம்பாய் மற்றும் அப்பு திரைப்படங்கள் விதிவிலக்கு. தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒரு நிகழ்ச்சி வருகிறது. அதனை நான் பார்த்ததில்லை. ஆகவே அது பற்றி நான் கருத்து சொல்ல இயலவில்லை.

திருநங்கைகளை வீதிகளில் காணும் போது, எனக்குள் ஒருவித கலக்கம் ஏற்படும்.. அவர்கள் மனதளவில் என்ன பாடுபடுவர்?? கடைகளிலும் வணிக தலங்களிலும் சென்று காசு கேட்கும்போது, தங்கள் சுயமரியாதை விற்கப்படுவதையும், தாங்கள் ஒரு காட்சிப்பொருளாக, ஒரு அறுவருக்கத்தக்க பொருளாக பார்க்கபடுவதும் மதிக்கப்படுவதும், அவர்களை எப்படி பாதிக்கிறது?? அவர்களிடம் அது பற்றி கேட்க வேண்டும், பேச வேண்டும் என தோண்றும். ஆனால் இது நாள்வரை நான் பேசியது இல்லை என்பது ஒரு வெட்கக்கேடான விடயம்.

மின்சாரவாரியத்தின் இணையதளத்தின் மூலம், நம் தமிழக அரசு ஒரு நல்ல ஆரம்பத்திற்கு வழி காட்டியுள்ளது..
பாராட்டுக்கள் !!


அடுத்து..



அண்மையில் எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்..
சென்னை மாநகராட்சியின் இணையதளம் பற்றியது..

சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் பிறப்பு, இறப்பு சாண்றிதழ்களை தேடி print செய்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் மூலம், நாம் நேரில் செல்லாமல், எவருக்கும் கையூட்டு தராமல் சுலபமாக சாண்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம். இதில் நாம் புதிதாக பதிவு செய்ய முடியாது. முன்பே பதிவு செய்துள்ளவர்கள் மட்டும் print செய்துகொள்ளலாம்.

1950ஆம் ஆண்டு முதல் சாண்றிதழ்கள் பெறலாம். எனக்கு மிகவும் பயன்பட்டது. எனது பிறப்புச் சாண்றிதழ் தொலைந்துவிட்டது. இத்தளத்தில் நானும் ஒரு சாண்றிதழ் பெற்றுக்கொண்டேன்.

மேலும் அத்தளத்தில், பிண ஊர்தி (Mortuary Van), குளிர்சாதனப்பெட்டி (Freezer Box), கல்லரை (Burial Ground) முதலியவைகளையும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

Tuesday, October 21, 2008

ஈழம் பற்றிய எனது எண்ணங்கள்..

சகோதரி தூயாவின் தொடர் பதிவுக்கு.. இதோ எனது மரியாதை..

1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?

ஈழம் பற்றி எனக்கு அறிமுகம் செய்துவைத்தது, என் பள்ளி தோழன் சோமஸ்கந்தன். 1980களிலேயே
அவர்கள் கடல்கட‌ந்து வந்தவர்கள்.. அப்போது அவன் சொல்லும் சிறு சிறு விடயங்கள் எனக்கு புரியவில்லை. (அந்த நண்பன் இப்போது எங்கு இருக்கிறானோ??)

பின்னர் ஒருமுறை, Frontline இதழில் ஒரு நிழற்படம். அதில், சென்னை உயர்நீதிமன்றம் அருகில் ஒரு காவலர் (கவனிக்கவும்..ஒரே ஒரு காவலர்) விலங்கிட்டு திரு.பிரபாகரன் அவர்களை அழைத்துச் செல்வதுபோல் வெளிவந்திருந்தது. அப்போது எனது பெரியதந்தையிடம் இது யாரு?? இவரைக் கைது செய்தது அப்படி ஒரு முக்கியச் செய்தியா? என்று கேட்டபோது, அவர் தந்த விளக்கம் சற்று புரிந்தது..

முழுமையாக உணரவில்லை எனினும், கண்ணத்தில் முத்தமிட்டால் திரைப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. (மன்னிக்கவும் தூயா.. தோழி ஒருவர் இன்றும் கொழும்பு நகரில் உள்ளார்.. அவரிடம் இதுபற்றி நான் அறிந்துகொள்ளாதது எண்ணி வியப்படைகிறேன்.. வருந்துகிறேன்..)


2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?

ஈழம் என்றில்லை, தமிழன் என்றில்லை.. எவராயினும், எங்கிருந்தாலும், முழு சுத‌ந்திரத்துடனும், சுயமரியாதையுடனும் சக மனிதனை நேசிக்கும் மனம் வேண்டும். சக மனிதனை நேசிக்காதவன் எவ
ராயினும் கண்டிக்க வேண்டியவரே..

இப்படி என்னதான் மூளை சொன்னாலும், தமிழன் வஞ்சிக்கப்படுகிறான் என்று எண்ணும் போது, மனம் வருந்துகிறது.

ஆதரவு என்று சொல்லிக்கொள்ளும்படி நான் இதுவரை ஒன்றும் செய்தது இல்லை. பதிவில் widget சேர்த்தது மட்டுமே.

3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?

உண்மையைச் சொல்வதென்றால்.. இல்லை.
அவ்வப்போது பதிவுகள் படிப்பதுடன் சரி.. அதுவும் அவ்வப்போது மட்டுமே..

தினம் தினம் இறப்போரின் எண்ணிக்கையை கணக்குபோட ஏனோ மனம் ஒப்புவதில்லை.


4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?

தோழர்களே.. தயவு செய்து தமிழகத்தில் இருந்து வரும் ஆதரவு குரல்களை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.. போதும் சிங்கள அரசியல்வாதிகளிடம் நீங்கள் ஏமாந்த்தது..

நாளையே நடிகர் ஒருவர் கட்சி ஆரம்பித்தாலோ, டெண்டுல்கர் மற்றொரு சாதனை புரிந்தாலோ, ஜோடி நம்பர் 1 ல் சிறு
குழப்பம் ஏற்பட்டாலோ நம்மவர்களின் பார்வைத் திரும்பி விடும்..

இங்குள்ள அரசியல்வியாதிகள், ஈழத்தில் போரென்னும் போது செய்யும் போராட்டமும், காட்டும் அக்கரையும், பரிவும், இலங்கை அரசின் தூதரிடமும் அதிபரிடமும் பேச்சுவார்த்தை நடத்துவதும், போர் நிறுத்தத்தின் போது அமைதிபேச்சு வார்த்தைக்கு ஏன் ஈடுபாடு காட்டுவதில்லை?? நார்வே நாடு காட்டிய அக்கரைகூட இன்று உங்களுக்கு ஆதரவு குரல் குடுப்போர் காட்டவில்லையே..


ஊடகங்களின் நாடங்களை தயவு செய்து நம்பிவிடாதீர்கள். இன்று உங்களுக்கு ஆதரவாகவோ ஒத்த கருத்தையோ பேசிவரும் ஊடங்கள் தான் சிறிது கால்ம் முன் உங்களை இன்றைய தலைகுறைக்கு தவறாக அறிமுகம் செய்து வைத்தது.

Please be aware!!

5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?

ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
தாழா துஞ்ற்று பவர். ‍ (620)

-----------------------------------------------------------------

சக மனிதன் என்ற எண்ணத்தினைவிட, என் சகோதரன் என்னும் ஓர் உணர்வு. அதவே இன்று தூயாவின் தொடரில் பங்குகொள்ள வைத்தது.
எனது கருத்தில் பிழை இருப்பின், மன்னிக்க வேண்டுகிறேன்.

உனக்கு.. உனக்காகவே மட்டும்..

நான்
நானாக இருந்தபோது
என்னை நேசித்தாய்..

நான்
நீயாக மாறிய பின்
ஏன் வெறுக்கிறாய்??

Friday, October 17, 2008

சச்சின் சாதனை.. நேரடி காட்சிகள்..



நன்றி:: YouTube

சாதனை!! சாதனை!! சாதனை!!



இன்று மொஹாலியில் ஆரம்பித்த 2வது டெஸ்ட் போட்டியில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த விஷயம் நடந்தேவிட்டது..  

அது எப்போ நடக்கும் எப்போ நடக்கும் என அனைவரும் ஆவலுடன் காத்திருந்த அந்த தருணம், 51வது ஓவரில் வந்துவிட்டது..  

சிடில் பந்து வீச, 51.1 வது பந்தை 3ஓட்டங்கள் அடித்து, உலகிலேயே அதிக ஓட்டங்கள் அடித்த ஆட்டக்காரராக டெண்டுல்கர் மிளிர்கிரார்...  

தொடரட்டும் உனது சாதனைகள்..
வாழ்த்திக்கள்.. 



Wednesday, October 15, 2008

PiT க்கு நம்ம Bit...

PiT  க்கு நம்ம Bit... 


நல்லாக்க்கீதா???

Monday, October 13, 2008

நினைக்க வைத்த அதிஷாக்கு நன்றி!!

இங்கே ஆரம்பித்த இந்த தொடர்வண்டி.. ச்சே.. தொடர்பதிவு, நம்ம தல அதிஷா மூலமா நம்ம பக்கம் வந்திருக்கு.. முதலில் தல நம்மள நல்லா மாட்டிவிட்டுடியேன்னு chatல் பொலம்பிவிட்டு.. சரி, எவ்வளவோ செய்யறோம்.. இத செய்ய மாட்டோமான்னு.. நாமும் கொஞ்சம் அசைபோடுவோம்னு போட்டு உட்காந்து யோசிச்சு எழுதிய பதிவு இது..

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

பதினைந்து மாத குழந்தையா இருக்கும் போதே சினிமா என்னை ஆட்கொண்டிருக்கு..
"மௌன கீதங்கள்" திரைப்படத்தில் வரும் அந்த சிறுவனைப் போலவே நான் இருந்ததால் அவனது உடை போலவே எனக்கும் அணிவித்து அழகு பார்த்துள்ளனர்.. ஆனால் இவையணைத்தும் எனக்கு நினைவில் இல்லை..
எனக்கு நினைவில் இருப்பது "பக்த ப்ரஹல்லாதா"

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
"சரோஜா" - என்னவளுடன் ஐநாக்ஸில் சினிமா பார்க்க வேண்டும் என்றாலே ஒரு பெரிய சாகசமாக தான் இருக்கும்.. ஒவ்வொரு முறை செல்லும் போதும் தானியங்கி படிகளிலுக்கும் (அதாங்க esclator..) அவளுக்கும் இருக்கும் பாச பிணைப்பு அப்படி..

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
நேற்று நன்பர் வீட்டில் பார்த்த "சுப்பிரமணியபுரம்"..
ஒரு புது தயாரிப்பாளர் சினிமா உலகுக்கு வரும்போது, ஒரு பெயர் பெற்ற இயக்குனர், முடிந்தால் ஒரு பிரபலமான நடிகர், நடிகை.. ஒரு புகழ்பெற்ற இசையமைப்பாளர்.. இவர்கள் யாரும் இல்லாமல், தானே தயாரித்து, தானே இயக்கி, ஓரிரு திரைப்பட அனுபவமே உள்ள ஜெய் மற்றும் கஞ்சா கறுப்புடன் தானும் களத்தில் இறங்கி.. ஒரு புதுமுக (இங்கு தான் புது, வேறு துறையில் பிரபலமான முகம்) இசையப்பாளர் ஜேம்ஸ்வசந்தன்.. இப்படி ஒரு கூட்டணியில் கலக்கி இருக்காரு சசிகுமார்.. வயசு 26 தானாமே?? படம் பார்க்கும் போது தெரியல..

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
"நாயகன்" என்ன படம்யா அது?? இதுவரை குறைந்தது 50/60 முறை பார்த்து பார்த்து, ஒவ்வொரு முறையும் இறுதியில் கண்ணீர் விட்ட திரைப்படம்..
"நாலு பேருக்கு நல்லது செய்யும்னா எதுவும் தப்பில்லை" இளவயதில் முதியவர் வேலுவுக்கு சொல்லும் பாடம்.. இறுதியில் "நாலு பேருக்கு நல்லது செய்ய தான் இவ்வளவும் பண்ணோம்.. ஆனா இப்போ, ஒரு கிழவனுக்காக ஒரு ஓரே கஷ்டபடுது.. பார்த்துகிட்டு சும்மா இருந்தா, இவ்வளவு நாள் செய்ததுக்கு அர்த்தமே இல்ல.." மறக்க முடியாத மறுக்க முடியாத வசனங்கள்..

"ரமணா" வெறும் காமடி படங்கள் மட்டுமே செய்துள்ள விஜயகாந்த் நடித்த ஒரே படம்.. என்னை யோசிக்க வைத்த ஒரு சில திரைப்படங்களில் இதுவும் ஒன்று.. "தண்டனைகள் கடுமையானா தான் தவறுகள் குறையும்" நிதர்சனமான உண்மை..

சேது, பிதாமகன், காதல், மொழி, மௌனராகம், அலைபாயுதே
இன்னும் சில படங்கள் பாதித்துள்ளன..

டிஸ்கி:: குணா, அன்பேசிவம், மகாநதி, குருதிப்புனல் இதெல்லாம் நான் லிஸ்டிலேயெ சேர்ப்பதில்லை.. அதுவே ஒரு தனி லிஸ்ட்..

5.அ உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
இந்த கேள்வியை Pass செய்கிறேன்

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
குருதிப்புனல் பிரம்மாண்டம் என்றால் பெரிய பெரிய செட் அல்லது நிறைய கூட்டம் என்று இருந்த தமிழ் சினிமாவிற்கு பிரம்மாண்டத்தை உணர்த்திய படம்.
தசாவதாரம்
படமே ஒரு technical பிரம்மாண்டம்..

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
உண்டு. குமுதம், விகடன் இவ்விரு இதழ்களிலும் முதலில் படிப்பது சினிமா செய்திகளையே..
என் நண்பர்கள் விஜய் மற்றும் முத்து இருவருமே ஒரு நடமாடும் சினிமா இதழ்கள்..

7.தமிழ்ச்சினிமா இசை?
இசை என்றாலே திரையிசை தான் என்று எண்ணி இருந்த காலம் உண்டு..

தினமும் காலை வானொலியில் பாடல்கள் கேட்பது மட்டுமே வேலையாக இருந்து 2ஆம் வகுப்பில் காலாண்டில் கோட்டை விட்ட கதையும் உண்டு..

மகிழ்ச்சி, துன்பம், கோபம், துயரம், சோர்வு, தனிமை, உற்சாகமின்மை.. இது போல பல வியாதிகளுக்கு இளையாஜா தான் எனக்கு மருந்தளிப்பார்..

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
சிறு வயதில், தஞ்சையில் உள்ள அருள் மற்றும் ராணிபேரடைஸ் திரையரங்குகளில் மட்டுமே ஆங்கில படங்கள் திரையிடுவார்கள்.. அப்போது சனிக்கிழமை தோறும் என் தந்தை மற்றும் மாமா உடன் நிறைய படங்கள் பார்த்த அனுபவம் உள்ளது.. ஆனால் எல்லமே இரவு காட்சி என்பதால் பாதியிலேயெ தூங்கிவிடுவேன்..
சென்னை வந்து நண்பன் புண்ணியத்தில் நிறைய வேற்று மொழி திரைப்படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.. அவற்றில், Forest Gump, Cinema Paradiso, Gladiator, Great Escape, Boys from Brazil.. மறக்க முடியாத திரைப்படங்கள்..

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
உண்டு..
இருக்கு..
அது பற்றி பேச இது சரியான காலம் அல்ல..

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எதிர்காலம் நன்றாகவே உள்ளது.. இளைய தலைமுறை இயக்குனர்கள் பலர், நம்பிக்கை தரும் வகையில் உள்ளனர்.. பாலா, அமீர், செல்வராகவன், ராதாமோகன், விஜி, குறிப்பிடதக்க இயக்குனர்கள்.. யுவன், ஹாரிஸ், G.V.பிரகாஷ், விஜய் ஆண்டனி குறிப்பிடதக்க இசையமைப்பாளர்கள்.. இவர்கள் கையில் தமிழ்த்திரை பத்திரமாகவே உள்ளது..

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
  • தொலைக்காட்சிகளுக்கு நிகழ்ச்சி தட்டுப்பாடு உண்டாகும்..
  • புத்தக விற்பணையும் நாளடைவில் வாசிப்பும் அதிகரிக்கும்..
  • மக்களுக்கு சிந்திக்கும் திறன் அதிகரிக்கும்..
ஒரு வருடம் என்பது சற்றே நீட்டித்தால் நன்றாக இருக்கும்..
-------------------------------------------------------

நான் அசைபோட்ட நினைவுகள் மாதிரி இவங்களும் அசைபோடனும்னு வேண்டி விரும்பி கேட்டுக்கறேன்..

  • ஜோசப்பால்ராஜ்
  • கையேடு
  • கார்க்கி
  • அக்னிபார்வை
  • அண்ணன் அப்துல்லா
  • ஸ்ரீமதி
  • தூயா

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.. :-)
(பின்னூட்டம் இடுவோர்க்கு மரியாதை செஞ்சாச்சி.. இனி நிம்மதியாத் தூங்கலாம்)

Friday, October 10, 2008

எங்கேயோ எப்போவோ படித்தது..

சாக முடிவெடுத்த பின் 
காதல்.. 
சரியான வழிதான்!!  

******************************* 
Once my friend said this to me...  

Do not react in any situation...  
RESPOND!!!  

*******************************  
துக்கம் தூக்கலான‌ அந்த இரவு வேளையில் ஞாபகம் வந்தது இது மட்டுமே..

உன்னைத் தானே..

உலகம் எனக்கென்றும் விலங்காதது..
உறவே எனக்கின்று விலங்கானது..
அடடா முந்தானை சிறையானது..
அதுவே என் வாழ்வின் முறையான‌து..

பாறை ஒன்றின் மேலே ஒரு போவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே
நானே எனக்கு நண்பன் இல்லையே உன்னால் ஒரு சொந்தம் வந்ததே

என்னைத் தானே.. தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
உயிர்ப் போவெடுத்து ஒரு மாலையிடு
விழி நீர் தெளித்து ஒரு கோலமிடு

பரிசல்காரனுக்கு கண்டனம்!!

பேய்கள் நடமாடுவதாக நம்பப்படும்
நடுநிசி 2.06 மணி..

அறை முழுதும் கும்மிருட்டு...

இரு விழிகளால்
அங்கும் இங்கும் நோட்டமிட்டபடி..
ஒரு உருவம்
மெல்ல நகர்ந்து..

கதவோரம் இருந்த
அந்த பொத்தானை
அழுத்த..

அறை இருள் நீங்கி..
பிரகாசித்தது...

"டேய், என்னடா இந்த நேரத்துல லைட் போடர??"
நண்பனின் குரலுக்கு "ம்ம்ம்ம்" என்ற பதிலை உதிர்த்து விட்டு, கணினி முன் அமர்ந்து எழுத்துக்களைத் தட்ட தொடங்கினேன்...

(ஹிஹிஹி... தூக்கம் வரலீங்க... என்ன பண்ணறது?? அதான் ஒரு மொக்கை..)

டிஸ்கி:: தலைப்புக்கும் இங்குள்ள விடயத்துக்கும் ஒன்னுமே சம்பந்தம் இல்லங்கோ.. SORRY பரிசலாரே!!

Tuesday, October 7, 2008

உழைப்பை எதிர்ப்போம் !!

உழைப்பு உயர்வைத் தரும்..  
உயர்வு பணம் தரும்.. 
பணம் திமிரைத் தரும்..
திமிரு ஆணவம் தரும்.. 
ஆணவம் அழிவைத் தரும்..  
So.. 
நாம் நாமாக இருப்போம்;
உழைப்பை எதிர்ப்போம்; 
rest எடுப்போம்.. 

நண்பனொருவன் அனுப்பிய குறுஞ்செய்தி.. மதிய உணவுக்குப் பின் சரிதானோன்னு தோணுது..
ஹிஹிஹி..

மின்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு..

"காதலில் விழுந்தேன் திரைப்பட இயக்குனர் திரு பி.வி.பிரசாத் தி.மு.க.விற்கு எதிராகவும், தி.மு.க.ஆட்சிக்கு எதிராகவும் தொலைக்காட்சியிலும், பத்திரிக்கைகளிலும் பேட்டி கொடுத்துள்ளார்.. அதானால், அவருக்கும் எனக்கும் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை. எங்கேயாவது அவர் என் பெயரைப் பயன்படுத்தினால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன்." என்று தமிழக மின்துறை அமைச்சர் திரு.ஆற்காடு வீராசாமி தனது சிறிய தாயாரின் பேரனான பி.வி.பிரசாதிற்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த பதிவினைப் படிப்பவர்கள், அமைச்சர் மின்வெட்டு தொடர்பாக ஏதாவது அறிக்கை வெளியிட்டுள்ளாரோ என்று எண்ணி இருந்தால் அதற்கு நான் நான் பொறுப்பாக மாட்டேன் என்று ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன்..

மின்சாரத்துறை அமைச்சர் பணிமாற்றம்..

*** தமிழகத்தில் எப்போதோ ஒருமுறை நிலவிவரும் மின்வெட்டை, மின்தடையை மின்துறை அமைச்சர் திறம்பட தீர்க்கவில்லை என தமிழக அமைச்சரவையில் நேற்று விவாதிக்கப்பட்டது.. அதற்கு மின்துறை அமைச்சரே பொருப்பேற்க வேண்டும் என ஒரு மனதாக தீர்மானம் நிரைவேற்றப்ப்ட்டு, அவரை பணிநீக்கமோ, பணிமாற்றமோ செய்ய முதலமைச்சருக்கு அமைச்சரவை அதிகாரம் வழங்கி உள்ளது..

இது குறித்து தீவிர ஆலோசணை ம்ற்றும் பரிசீலனைக்கு பின், முதலமைச்சர் மின்துறை அமைச்சரை பணிமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்... ***

படித்தவுடன் உங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி தான் எனக்கும் ஏற்பட்டது.. ஆனால், அந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட தாக்குபிடிக்கவில்லை.. காலை 6 மணிக்கு ஏற்பட்ட மின்வெட்டால் என் தூக்கம் கலைந்து, நான் கண்ட கனவும் கலந்துவிட்டது..

அது சரி, நாம் தமிழகத்தில் தானே இருகிறோம்.. இப்படி ஏதாவது நடந்துவிட்டால் அப்புறம் நமக்குன்னு இருக்கர மரியாதை என்னாகிறது??

இன்று வந்த Times of India பத்திரிக்கையில் ஒரு செய்தி..
3 TNEB engineers pay for power cut at CM function
Three TNEB engineers paid for what could have been the fault of some contractors. A power cut which lasted barely a few minutes during a public meeting of chief minister M Karunanidhi at the Kalaignar Arivalayam in Tiruchi resulted in three of the employees being transferred. According to sources, 350 KVA was sanctioned for Arivalayam. But the electricians failed to set the low voltage (LV) breaker, a device to control the inflow of power. When there was a surge in the inflow, the LV breaker tripped.


இந்த செய்திக்கும், நான் மேற்கூரிய கனவுக்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை.. அப்படி நீங்கள் தொடர்புபடுத்தி புரிந்துகொண்டால் அதற்கு நான் பொருப்பில்லைங்கோஓஓஓஓ...

Sunday, October 5, 2008

சென்னை பதிவர் சந்திப்பு - ஓர் புகைப்பட பார்வை..

சென்னையில் நேற்று(4/10/08) நடந்த பதிவர் சந்திப்பு பற்றி பலர் பதிவு எழுதிட்டாங்க.. திரும்ப நானும் அதுபற்றி எழுதினா அடி தான் வாங்குவேன்..

அதுனால.. நிழற்படப்
பார்வை மட்டும்..







last.. but not the least...

என்ன அதிஷா, மகிழ்ச்சியா??

Wednesday, October 1, 2008

ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள்!! அப்துல்லா அண்ணனுக்கு வணக்கங்கள் !!

புனித ரமலான் பெருநாளன்று அலுவலகம் சென்று முதலில் நான் பார்த்த மின்னஞ்சல் என் மனசை ஈர்த்தது..



எனது நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..

இன்று புதிதாய் ஒரு நண்பர் திரு. புதுகை அப்துல்லா பற்றித் தெரிந்துகொள்ள வாய்ப்பளித்த நண்பர் பால்ராஜ்க்கு நன்றி..
இதன் மூலம் அப்துல்லா அண்ணனுக்கு எனது ரமலான் வாழ்த்துக்கள்
தெரிவித்துக்கொள்கிறேன்..

ஒரே வருத்தம், வரும் சனிக்கிழமை அப்துல்லா அண்ணன் சென்னை பதிவர் சந்திப்புக்கு வர மாட்டாராம்..
:‍‍-(‍
என்ன ஒரு பொருத்தம் பாருங்க.. பால்ராஜ் மூலமா செந்திலுக்கு அப்துல்லா அறிமுகம்.. அதும் ரமலான் அன்று.. :‍-)
Related Posts with Thumbnails