Thursday, November 27, 2008

போதை ஏறிப் போச்சு..

மதியம் மணி 3..
என் அலுவலக இருக்கையில் நான்..
கண் முன்னே கணிணி.
மனம் எங்கோ வட்டமிட,
தட்டச்சினை
தட்ட முடியாமல் தவிக்கிறேன்..

தூக்கமா??
துக்கமா??
விரக்தியா??
கோபமா??

அட இல்லைங்க..
மப்பு!!

சரக்கு அடிச்சா தான் மப்பு வரனுமா??
உணவும் போதை தரும்..

ஆவ்வ்வ்..
சரி அப்புறம் பார்ப்பொம்
..
டிஸ்கி::
என்னங்க இது, இரண்டரை நாளா ஒரே மழை (ஆமாங்க ஒரே மழை தான்.. விட்டுவிட்டு பேஞ்சாத் தானே வேறு வேறு மழையா இருக்கும்.. குமாரு குட்டவரான்..) கொட்டுது.. 
அலுவலகத் தரைத்தளம் மிதக்குது.. ஆனா நாங்க ஆணி புடுங்கறத மட்டும் நிறுத்தபடாதாம்.. ம்ம்ம்ம்.. 
ஒரு டீ குடிக்க கூட போகமுடியல.. என்ன கொடுமைங்க.. அதான் ஒரு மீள்பதிவு.. 

Tuesday, November 25, 2008

என்ன கொடுமை சார் இது???

கோவிலுக்கு செல்வதற்கு பலருக்கு பல காரணங்கள் இருக்கும்.. 
    சிலர் புண்ணியம் தேடி செல்வர்.. 
    சிலர் மன அமைதிக்காக செல்வர்.. 
    சிலர் வேண்டுகோள்களோடு செல்வர்.. 
    சிலர் பாபங்களோடு செல்வர்.. 

எது எப்படியாயினும்.. 

கோவிலோ, மசூதியோ, தேவாலயமோ.. மனம் ஒருமுகப்பட்டு வேண்டினால் நல்லது என்பது பொதுவான கருத்து.. 

சரி.. தலைப்புக்கு வருவோம்.. 

கடந்த ஞாயிறன்று காலை 5 மணியளவில் சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு நண்பனுடன் சென்றிருந்தேன்.. நாங்கள் சென்றிருந்த வேலை முடிய சிறிது நேரமாகலாம் என்றிந்த வேளையில்.. சரி ஒரு காபி குடிக்கலாமேன்னு பக்கத்திலிருக்கும் தேனீர் கடைக்கு சென்றோம்.. (காபி குடிக்க காபி கடைக்கு தானே போகனும். நீ ஏன் தேனீர் கடைக்கு போனன்னு குமார் கேட்கிறான்) 

அப்போது எங்கள் கண்ணில் விழுந்த காட்சி, அந்த அதிகாலை வேளையிலும் மயிர்கூச்செறிய செய்தது..  

நாங்களாவது ஒரு வேலையாக அங்கு சென்றிருந்தோம்.. மேலே குறிப்பட்ட காரணங்களுக்காக கோவிலுக்கு வருவோரின் நிலை என்னாகும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது.. 

ஏங்க.. தெரியாமத் தான் கேட்கறேன்.. 
”கொடுமை கொடுமைன்னு கோவில்லுக்கு போனா, அங்க ஒரு கொடுமை தலை விரிச்சி ஆடுச்சாம்” என்ற பழமொழிக்கு அர்த்தம் இது தானோ??





முடியல.. அழுதுடுவேன்.. 
அதனால இத்தோட முடிச்சகறேன்..

உயிரே உனக்காக..


மோனாலிசாவைப் பார்த்ததில்லை..
ஊமைச் சிரிப்புக்கு
அர்த்தம் புரியவில்லை.. 

ஆனால் அன்பே

ஒவ்வொரு முறை
நீ 
ஒன்னுமில்லை
எனும் போதும் 
என் இதயம் படபடக்கிறது
உன் மனதில் ஏதோ உள்ளதென்று..

குழந்தையும் தெய்வமும்
ஒன்றென
கூறக்கேட்டேன்..
குழந்தையும் நீயும்
ஒன்றென
உணர்ந்தேன்..

என்னை விடவும் 
உன்னை நேசித்தேன்
உன்னை விடவும் 
உன்னை நேசிக்கிறேன்

உன்னை விடவும் 
துணியேன்
உன்னை விட்டு
பிரியேன்.. 

Wednesday, November 19, 2008

நன்றி!! மன்னிப்பு!!

நாம் அன்றாடம் உபயோகிக்கும் வார்த்தைகளில் நன்றியும் மன்னிப்பும் மிக முக்கியமானது..

வள்ளுவர் கூட
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

என்று கூறி உள்ளார்..

ஆனால் இன்று நாம் கேட்கும் மன்னிப்பும் கூறும் நன்றிக்கும் அர்த்தம் தெரிந்து தான் அவ்வார்த்தைகளைப் பயன்ப்டுத்துகிறோமா??

நன்றி என்பது உள்ளத்திலிருந்து வரவேண்டும்..
மன்னிப்பு கேட்கும் போது கண்களைப் பார்த்து கேட்க வேண்டும்..

இவை இரண்டுமே இன்றைய வாழ்வில் நிகழ்வதில்லை.. நன்றி சொல்வது கடமையாக்கப்பட்டுவிட்டது.. மன்னிப்பு கேட்பது மற்றொரு வார்த்தையாகிவிட்டது..

மன்னிப்பு கேட்பர் தான் வருந்திய அச்செயலைனை மீண்டும் செய்யக் கூடாது.. ஆனால்.. மன்னிப்பு என்பது வெறும் வார்த்தையான இன்றைய சமூகத்தில் அதே தவறுகள் மீண்டும் மீண்டும் நடத்தப்படுகிறது..

சரி..
நன்றி & மன்னிப்பு கேட்பதும் இடத்திற்கு இடம் பொருள் வேறுபடுகிறது..

மேலதிகாரியிடம் ஒருவர் கேட்கும் மன்னிப்பும்.. வெறும் பாசாங்கு வார்த்தை.. அவரிடம் கூறும் நன்றி.. நான் இதைச் செய்ய கூடியவன், இது வரை நீ தான் என்னை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றும், அடுத்து கேட்கவிருக்கும் சம்பள / பதவி உயர்விற்கு அடிபோடுவதுமாக இருக்கிறது..

ஊடலில் இருக்கும் காதலன்/ காதலி மற்றவரிடம் கூறும் நன்றி & மன்னிப்பு.. அவரைத் திட்டுகிறார் என்ற பொருளைத் தருகிறது.

வேண்டாவெறுப்பாக கேட்கப்படும் மன்னிப்பும் கூறப்படும் நன்றிகளும் அதற்குரிய மரியாதையை இழக்கிறது.. மேலும் அவர்களை கேவலப்படுத்தும் செயலாகவும் இவ்விரு வார்த்தைகளும் பயன்படுகிறது..

பெற்றோரிடம் நாம் நன்றி என்ற ஒற்றை வார்த்தையினால் முடித்துக்கொள்ள முடியாது.. அவர்களது செயல்களுக்கு காலாகாலமும் நாம் கடமைப் பட்டு இருக்க வேண்டுமே ஒழிய நன்றி என்ற வார்த்தையால் அவர்களை ஒதிக்கிவிடக் கூடாது.

நண்பர்களிடம் நன்றி & மன்னிப்பு தேவையற்றது என்று என் நண்பர் ஒருவர் அடிக்கடி கூருவார்.
அவரிடம் ஒரு முறை நான் நன்றி கூறியதும், மன்னிப்பு கேட்டதும் பெரும் தவறாக போய் அடுத்த சண்டைக்கு வழிவகுத்தது..
ஆனால் என்னைப் பொருத்தவரை.. நண்பரிடமும் நன்றியும் மன்னிப்பும் தேவை.. அவை வெறும் வார்த்தைகளாக இல்லாதவரை..

இன்னொரு நண்பர்.. தன் தந்தை தாயிடமும் நன்றி சொல்லுவார்... நண்பருக்குள்ளயே நன்றி வேண்டாம் என்ற கருத்து இருக்கும் போது, இவர் இப்படி.. ஏன் இப்படி என்னிடமே formalஆ பேசறன்னு அவரது அப்பா கேட்டதற்கு, “எந்த ஒரு நல்ல பழக்கமும் வீட்டில் தான் பழக முடியும்.. உங்ககிட்ட நான் thanks சொல்லறது தான் பின்னாடி அடுத்தர் கிட்ட சொல்ல practiceஆ இருக்கும்”ன்னு சொன்னாரு..
ஏங்க.. நீங்க practice பண்ணறதுக்கு உங்க அப்பா அம்மா உணர்வுகள் தான் கிடைச்சதா???

என்னமோங்க..
நன்றிகளும் மன்னிப்புகளும் வெறும் வார்த்தைகளாக பயபடுத்தாமல் உள்மனதில் இருந்து அதன் அர்த்தத்தையும் அவசியத்தையும் புரிந்து பயன்படுத்தினால் உறவுகள் இன்னும் வலுப்பரும்..

டிஸ்கி::
சிலருக்கு மன்னிப்ப்பூபூபூ தமிழயே பிடிக்காத வார்த்தையா இருக்கு.. ம்ம்ம் என்ன செய்யறது??

Tuesday, November 18, 2008

கவிதையே உனக்காக !!

எனக்கு ஒரு கவிதை
எங்கேயென்று
கவிதையே கேட்டது..

கவிதைக்கே கவிதையா??
திருப்பதிக்கே லட்டுவா??

உனக்கொரு கவிதை எழுத
பற்பல முயற்சிகள்..
அனைத்தும் தோல்வி.
வெண்றது உன் காதல்..
வீழ்த்தியது உன் நினைவுகள்..

Friday, November 7, 2008

அற்ப ஆசை.. அல்ப சந்தோஷம்..

அது என்ங்க எல்லாரும் அவங்கவங்க வலைப்பூவில Hit Counter வச்சிருக்காங்க.. (நீயும் தானடா வச்சிருக்கியேன்னு பால்ராஜ் சத்தம் கடல் தாண்டி கேட்குது).

இன்று ஒரு மூத்த பதிவரோட (மூத்த பதிவர்ன்னா என்னங்க அர்த்தம்?? உடல் வயதிலா இல்ல வலைப்பூ வயதிலா?? எப்படி பார்த்தாலும், இவர் எனக்கு மூத்தவர் தான்) பதிவைப் படிச்சிட்டு இருக்கும் போது இந்த பதிவோட தலைப்பு தான் தோணிச்சி.. அதுல அவரு 3லட்சம் hits என்றும் (அதுவும் நாளை தான் வரும்ன்னு நேற்றே பதிவு எழுதி இருக்காரு) அதுல அவர் தனது பதிவ பார்த்தது கணக்குல வராதுன்னும், 3லட்சம் hits குடுத்த நண்பர்களுக்கு நன்றின்னும் சொல்லி இருந்தார்.. அதுக்கு அவரே ஒரு சப்பைகட்டு வேற.. யாருமில்லாத கடையிலே டீ யாருக்கு ஆத்தறேன்னு விவேக் கேக்கறமாதிரி இருக்காது. அப்படீன்னுன்னு ஒரு ஆறுதல் அவ்வளவுதான். ”

எனக்கு என்ன புரிய மாட்டேங்குதுன்னா.. இந்த hits வைச்சி என்ன பண்ணபோறோம்??
ஏன் நமக்கு இந்த அல்ப ஆசை?? நாம பதிவு போடறதே Bloggerla ஓசி.. இதுல எத்தன பேர் படிச்சா என்ன?? படிக்கலனா என்ன?? நாம என்ன சமூக சீற்திருத்த கருத்துக்களா எழுதறோம்?? ஒரு பயனும் இல்லாம பொழுது போகாம தான எழுதறோம்.. அதுல எதுக்கு இந்த அற்ப ஆசை எல்லாம்??

இதுவும் ஒரு வித போதை தானே??
சில பதிவர்கள் எழுதும் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. சிலரது பதிவுகள் புதிய விடயங்களை தருகிறது.. சிலரது பதிவுகள் ஒரு விடயத்தை வேறு கோணத்தில் யோசிக்க உதவுகிறது.. சிலரது பதிவுகள் ஏண்டா படிச்சோம்னு நினைக்க வைக்கிது.. என்ன செய்யறது..
எதுவா இருந்தாலும், Hits counter வைச்சிகிறது தேவை இல்லாததுன்னு எனக்கு தோணுது..

ஏன் நமக்கு இந்த வெட்டி பந்தா?? நாண்கு தலைமுறைக்கு முன் வாழ்ந்த நம் மூதாதயர் பெயர் கூட நமக்கு தெரியாது.. அப்படி இருக்கும் போது, வரும் சந்ததியினர் இரண்டு தலைமுறைக்கு மேல் ஞாபகம்
நம்மை வைத்து இருந்தால் பெரிய ஆச்சரியம்.. அப்படி இருக்கும் போது இந்த பெருமை நமக்கு தேவையா??

நான் பதிவு எழுத ஆரம்பித்து ஏறத்தாள 2 வருடம் ஆக போகுது.. ஆரம்பிக்கும் போது எனக்கு தோண்றும் எண்ணங்களை, என்னை யோசிக்க வைத்த நிகழ்வுகளை, என்னை பாதித்த சம்பவங்களை பதிவு செய்ய மட்டுமே எழுத வேண்டும் என்று முடிவெடுத்து எழுதிவந்தேன்.. மிகச் சமீபத்தில் தான் நண்பர் பால்ராஜ் மூலம் தமிழ்மணம் அறிமுகப்படுத்தப்பட்டது.. அதன் பிறகு எனக்குள் ஒரு மாற்றம்..பதிவு போதையும்.. Hit Counterம் எனக்கும் பெருமிதம் தர ஆரம்பித்தது.. ஆனால் இப்போது மனம் நெருடுகிறது..

ஒரு காமெடி.. இந்த பதிவு எழுதும் போது, நண்பர் ஒருவருடன் chatல் பேசிக்கொண்டிருந்தேன்.. அவரிடம் நம்ம மூத்த பதிவர் பற்றியும் இந்த பதிவு பற்றியும் மறைமுகமா தெரிவித்தேன்.. அதற்கு நண்பர்,
அவர வம்பிழுத்தா சீக்கிரம் பெரிய ஆளாயிடுவ” ன்னு சொன்னாரு.. என்னத்த சொல்லரதுன்னு சிரிச்சிக்கிட்டேன்.. கிகிகி

என்னமோ.. நல்லத செய்தா சரி..

டிஸ்கி::
  1. எனது வலைப்பூவிலிருந்து hits counter நீக்கப்படுகிறது..
  2. இது யாரையும் புண்படுத்த எழுதப்பட்டது அல்ல.. இருப்பினும், புண்படுத்தியிருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்..

Thursday, November 6, 2008

சமையல் சமையல்..

நேற்று அலுவலகத்துக்கு விடுமுறை விட்டுவிட்டு (ஆமா.. நாம தான் அங்க deciding authority பாருங்க. நாம சொன்னவுடன் விடுமுறை தான்.. கிகிகி) வீட்டில் இருந்தபோது, நம் வருங்கால தங்கமணிக்கு விருந்து தர எண்ணினேன்.. சம்பளம் 5ஆம் தேதி மாலை தான் வரும்.. என்ன செய்யலாம் என்று தீவிரமா யோசிக்கும் போது.. என்றோ எங்கோ படித்த மற்றும் கேட்ட 2 recipes நியாபகத்துக்கு வந்தது.. சரி.. தங்கமணிக்கு நாமே சமைத்து தரலாமேன்னு ஒரு விபரீத முடிவு எடுத்தாகிவிட்டது... சும்மா இல்லங்க.. நல்லாவே வந்தது..

தங்கை தூயாவும், நண்பர் பால்ராஜும் chatலும் அலைவபேசியிலும் வந்தார்கள்..
நம்ம நளபாக சாதனையை அவங்ககிட்டயும் சொல்லப் போக.. அவங்களும் செய்முறை சொல்ல சொல்லி ரொம்ப ரொம்ப தொந்தரவு செய்ய ஆரம்பிச்சிட்டாங்க.. (ஒரு முறை கெட்டதே எங்களுக்கு அங்கீகாரம் தான.. கிகிகி)..

செய்ம்ய்றை மட்டும் சொல்லறேன்.. அளவெல்லாம் நீங்களா பாத்துபோட்டுக்கோங்க..

முதலில்.. காப்ஸிகம் புதினா சாதம் (Capsicum Mint Rice)

தேவையான பொருட்கள்:
  1. காப்ஸிகம் - 2
  2. புதினா - கொஞ்சம்
  3. அரிசி - 200கிராம்
  4. உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • முதலில் காப்ஸிகம் எடுத்து சுத்தமான் தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும் (சுத்தம் சோறு போடும்.. அது சரி ஆனா சாதம் நாம தான் வடிக்கனும்.. கிகிகி)
  • புதினாவையும் சுத்தமான தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும்.
  • சுத்தம் செய்யப்பட்ட காப்ஸிகம் மற்றும் புதினாவை நன்றாக அரைத்துக்கொள்ளவும் (தண்ணீர் சேர்க்கக் கூடாது..)
  • சாதம் வடித்துக்கொள்ளவும்
  • அரைத்து வைத்துள்ள காப்ஸிகம் மற்றும் புதினாவை சாதத்தில் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து ஒரு கலக்கு கலக்க வேண்டும்..
அவ்வளவு தான்.. காப்ஸிகம் புதினா சாதம் தயார்..

அடுத்து.. வெஜிடேரியன் ஃபிஷ் ஃபிரை.. (Vegetarian Fish Fry)

தேவையான பொருட்கள்:
  1. வாழக்காய் - 1
  2. மிளகாய் பொடி - தேவையான அளவு
  3. கடலை மாவு (அ) கார்ன் மாவு - தேவையான அளவு
  4. ந.எண் - தேவையான அளவு
  5. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
  • வாழக்காயை நன்றாக தோல் சீவிக் கொள்ளவும்
  • தோல் சீவிய வாழக்காயை வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும்
  • வெட்டப்பட்ட வாழக்காயை cookerல் வைத்து வேகவைக்கவும். (2 விசில் வரும்வரை)
  • வேக வைக்குபோதே உப்பு சேர்த்துவிட்டால், உப்பு வாழக்காயுடன் நன்றாக கலந்துவிடும்.
  • வாழக்காய் வெந்தவுடன், அதனை ஒரு தட்டில் பரப்பி வைத்து உலர்த்தவும் (fanக்கு கீழே வைத்தால் சீக்கிரம் உலர்ந்துவிடும்)
  • வெந்த வாழக்காய் நன்கு உலர்ந்தவுடன், தேவையான அளவு மிளகாய்த்தூள் மற்றும் கடலைமாவு (அ) கார்ன் மாவு தூவி மீன் வறுவலுக்கு கலந்துவிட வேண்டும்.
  • பின் அதனை சிறிது நேரம் உலர விட வேண்டும். (அப்போது தான் மசாலா வாழக்காயில் சேரும்)
  • பின், தோசைக்கல்லில் சிறிது ந.எண் விட்டு பொறித்து எடுக்க வேண்டும். (நன்றாக பொறித்து எடுக்கவும்)
சிறிது கூடுதலாக கடலை மாவு (அ) கார்ன் மாவு சேர்த்தால் நல்லா மொறு மொறு வென்று இருக்கும்..

அம்புட்டு தான்...

சாப்பிட்டுவிட்டு நல்லா இருந்ததுன்னு சொன்ன என் வருங்கால தங்கமணிக்கு இந்த பதிவு சமர்ப்பணம்..

டிஸ்கி::
  1. இதெல்லாம் நான் சொல்ல சொல்ல செய்தது தங்கமணி தானுங்கோ.. ஆனால், idea நம்மளோடது.. கிகிகி..
  2. செய்து பார்த்துட்டு.. முக்கியமா சுவைத்து பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க..
  3. Vegetarian Fish Fry எங்கோ ஒரு பதிவு படித்தது தான்.. எங்கன்னு ஞாபகம் இல்ல.. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க.. அந்த முகம் தெரியாத நண்பருக்கு நன்றி..

Tuesday, November 4, 2008

கோடி நன்றிகள்!!


"மச்சி, என்னடா இன்னும் signalலே போடல.. எப்போடா train வரும்??" முதல்ல
ஒருத்தன் இப்படி
தான் ஆரம்பித்தான்..

"வரும்.. ஆனா வராது.."
ஒரு குறும்பன் நகைத்தான்..

"வாங்கடா busல போகலாம்." மற்றொருவன்
முன்மொழிந்தான்.

"ஆமாம்டா.. எவ்வளவு
நேரம் தான் இப்படி உட்கார்ந்து இருக்கறது.. busக்கு
போகலாம் வாங்க.." இது இன்னொருவன்..

ஆனாலும், அந்த
சுட்டெறிக்கும் வெயிலில், அரை கிமீ நடந்து போய் bus பிடிக்க யாருக்கும் மனசு இல்ல.. வாய் பேசியதே தவிர யாரும் இருக்கற இடத்தைவிட்டு எழுந்திரிக்க கூட இல்லை..

அது ஒரு கல்லூரி மாணவர் குழு.. பெரிய வெண்ணிலா கபடி குழு எல்லாம் இல்ல.. ஒரு group அவ்ளோதான்.. 11 நண்பர்கள்.. எப்போதும் ஒன்றாகவே சுத்தறது.. class cut அடிக்கறது, சினிமா போறது, cricket பாக்கறது.. விளயாடறது.. அப்பப்போ mid sem, end sem வந்தா படிக்கறது.. இது தான் அவர்கள் ..

கல்லூரியில் செட்டு சேர்ந்தது சிலர்.. அதற்கு முன்பே செட் ஆனது சிலர்.. இப்போ எல்லாரும் ஒரே செட்டு.. (அப்துல்லா அண்ணன் "ஆமா பெரிய சேவிங் செட்டு"ன்னு சொல்லறது காதுல விழுது..)

11 பேரில் மூவர் அருகிலுள்ள அம்மாப்பேட்டை என்னும் ஊரிலிருந்து வருபவர்கள்.. மற்றவர்கள் அனைவரும் ரயிலில் தஞ்சையிலிருந்து வருபவர்கள்.

தினமும் ரயிலில் தான் வருவார்கள்.. போவார்கள்..

சிலர் ஸீசன் டிக்கெட் எடுத்து இருந்தனர்.. சிலர் தினமும் டிக்கெட் எடுத்து வருவர்.. சிலர் எப்போது டிக்கெட் எடுக்காமல் வருவர்.. (பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டார்கள்.. அது தனி கவிதை[??!!])

அன்று அம்மாபேட்டை ராஜாக்களும் தஞ்சாவூர் நண்பர்களோடு மொக்கை போட்டுக் கொண்டிருந்தனர்.


தியாகு.. இந்த கூட்டத்திலேயே ரொம்ப நல்லவன்.. யார் அவன வம்பிழுத்தாலும், ஒண்ணுமே சொல்லமாட்டான்.. அவனோட மற்றொரு வகுப்பு தோழன் மணிகண்டன் வழக்கம் போல வம்பிழுத்துக்கிட்டு இருந்தான்..

மணிக்கு சொந்த ஊர் கோவை.. (nativeன்னா சொந்த ஊர் தானே?? சொந்த ஊர்ன்னு சொன்ன உடன் சொந்த காசு குடுத்து வாங்கினதான்னு கேட்ககூடாது)
மணிக்கு கோயமுத்தூர் குசும்பு கூடவே பிறந்தது.. நம்ம தமிழ் சினிமாவில் இரட்டை அர்த்த‌ வசனங்கள் சாதாரனம் என்றால், நண்பர் மணி பேசினால் குறைந்தது 4/5 அர்த்தங்கள் புரிந்துகொள்ளலாம்..


தியாகு ஏதோ கேட்க‌, மணி அதற்கு திருவிளையாடல் தருமிக்கு சிவன் பதில் சொன்ன மாதிரி பதில் சொல்லிக்கொண்டிருந்தான்..

இந்த செட்டிலே சுவாமி சுவாமின்னு ஒருத்தன்.. எப்ப பார்த்தாலும் அவனுக்கு cricket தான். ரயிலுக்காக வெயிட் செய்யும் போதும் அங்க இருக்கற கல்லை பந்தா பாவிச்சு எறிஞ்சி விளையாடிக்கிட்டு இருப்பான்..

அவனும் தனது cricket விளையாட்டை விட்டுட்டு தியாகு - மணி சம்பாஷனையில கலந்துக்கிட்டான்..

இப்படி ஒவ்வொருத்தாரா சேர்ந்து, திருவிளையாடல் dialogue இவங்ககிட்ட சின்னா பின்னமாயிடுச்சு.. உரையாடல் களைகட்ட துவங்கியது..

இதுல 3 பேர்.. யாராவது ஒண்ணு சொன்னா, அதபிடிச்சிகிட்டு 100 செஞ்சிடுவாங்க.. (படிக்கறத தவிர..) கொஞ்சம் ஆர்வகோளாரு..
சட்டுன்னு ஒருத்தன் நோட்டில் குறிப்பெடுக்க ஆரம்பிக்க, dialogue பல கோணங்கள் எடுக்க ஆரம்பித்தது..


"இத நாம இப்படியே விட்டுட கூடாது. நாம ஒரு நாடகமா இந்த வருஷம் college functionல போட்டுடலாம்" செந்தில்..

"ஆமா, உன்னத்தான் நாடகம் போட தேடிக்கிட்டு இருக்காங்க.. போடா நீ வேற" பால்ராஜ் கோவப்பட்டான்..

"அதுனால என்ன?? நாம இத printout எடுத்து trainல ஒட்டிடுவோம்.. எல்லாரும் படிச்சி பயன்பெறட்டும்." அடுத்த கருத்தை செந்தில் எடுத்து விட.. அனைவருக்கும் அது சரி என்று படவே, மசோதா நிறைவேற்றப்பட்டது..


சுறுசுறுப்பாக குறிப்பெடுக்கும் படலம் ஆரம்பமானது..
"trainல ஒட்டினா பிரச்சினை வர போகுது. பேசாம கையில குடுத்துடுங்க" பிரபாகர், புதுசா ஒரு குண்ட தூக்கி போட்டான்.. அதுவும் சரி என்று ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது..


மீண்டும் ஒரு கருத்து வந்து விழுந்தது.. சரவணனிடமிருந்து..
"இத ஏன் ஒரு magazineஅ நம்ப circulate பண்ணக்கூடாது??"

"superடா trainல circulate பண்ணலாம்.." பால்ராஜ் ஆர்வமானான்..


"போங்கடா நீங்களும் உங்க magazineம்.. train வந்திடுச்சி, வாங்க போகலாம்" என்று சுவாமி குரல் குடுக்க, சபை கலைந்தது..

அம்மாப்பேட்டை நண்பர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு, அனைவரும் ரயிலுக்கு சென்றனர்..

இந்த மூன்று ஆர்வகோளாரு பசங்களும் ரயிலில் போகும்போதும்
நிறுத்தவில்லை..

"மச்சி, நாம இத விடக்கூடாது. கண்டிப்பா magazine... பொடறோம்."
"ஆமம்டா.. "

ரயில் தஞ்சையை சென்றடைய 20 நிமிடங்களாகும்.

ரயில் தஞ்சையை அடைந்தபோது செந்தில், சரவணன், பால்ராஜ் மூவரும் ஒரு வார இதழுக்கு ஆசிரியர் ஆகி இருந்தனர்..

மூவரும் தங்கள் பெயரில் உள்ள எழுத்தகளை வத்து magazineக்கு ஒரு பெயர் வைத்துவிட்டனர்.. "SenSarPal Weekly"

அவர்கள் மூவருக்கும் "ஆனந்த விகடன்" மேல் ஒரு ஈற்பு.. அப்பொதெல்லாம் தஞ்சையில் ஆனந்த விகடன் புதன்கிழமை வெளிவரும்.. இவர்களும் தங்களது வார இதழ் புதன்கிழமை தோறும் வெளியிடுவது என்று முடிவெடுத்தனர்.

அடுத்துவந்த இரு நாட்கள் துரிதமாக கடந்து சென்றது..

31/12/1997 "SenSarPal Weekly" தஞ்சை திருவாரூர் ரயிலில் முதன்முறையாக விநியோகிக்கப்பட்டது.. அனைவருக்கும் இலவசமாகவே தரப்பட்டது..


முதலில் கையில் எழுதி xerox... எடுத்து விநியோகம் செய்யப்பட்ட "SenSarPal Weekly" பின்னர் NIITயின் உதவியுடன் print செய்யப்பட்டு xerox எடுத்து விநியோகிக்கும் அளவு உயர்ந்தது..

அருகில் இருக்கும் அஞ்சலை அம்மாள் மஹாலிங்கம் பொறியியல் கல்லூரி மாணவர்களும் ஆதரவு தர ஆரம்பித்தனர்.. (அங்க படிக்கிற பெண்கள் தானே இவர்களது target...)

இரண்டு வருடங்கள் வாரம்தோறும் வெளிவந்த "SenSarPal Weekly", அந்த மூவருக்கும் ஒரு தளமாக அமைந்தது..

இன்று அவர்கள் வெவ்வேறு திசையில் வெவ்வேறு துறைகளில் ஜொலித்துக்கொண்டிருக்கிறனர்...

(ஆங்கில அகர வரிசைப்படி..)

சார்லஸ்.. அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் (அன்று நீ ஆசிரியருக்கு தந்த தொந்தரவுகள் இன்று உனக்கே repeata????)

கோகுல்.. கணினி துறையில் வல்லுனர்.. (வல்லுனர் தானே???)

பால்ராஜ்.. கணினியில் SAP... ஜாம்பவான்.. (ASPயிலிருந்து SAPக்கு jump ஆனதினாலால ஜம்ப்வான்னு சொல்ல முடியாது இல்லயா?)

பிரபாகர்.. மென்பொருள் வல்லுனர்..

ரஞ்சித்.. ரொம்ப நல்லவர்.. வல்லவர்.. படிப்பாளி.. சொன்னதைச் செய்தவர்.. இன்று
ஃபிரான்சில்Post Doctorate Fellowship... (correcta?) செய்துகொண்டிருக்கிறார்..

சரவணன்.. கணிப்பொறி marketing துறையில்

Sriராம்.. மென்பொருள் வல்லுனர்..

சுவாமி.. மென்பொருள் வல்லுனர்..

தம்பி.. மென்பொருள் வல்லுனர்..

தியாகு.. கணிப்பொறி வல்லுனர்..

செந்தில்... மனிதவளத் துறையில் பொட்டி தட்டிக்கொண்டு, ஒரு சிறிய உணவகமும் நடத்திக்கொண்டு இருக்கிறான்..

ஆமாங்க.. இது எங்க கதை தான்.. நானும் எழுத்தாளன் ஆன கதை..

அன்று அவர்கள் குடுத்த ஊக்கம் தான் இன்று பால்ராஜும், சரவணனும், நானும் ஒரு பெரிய எழுத்தாளர் ஆவர்தற்கு விதை..

நீ எப்போ எழுத்தாளன் ஆனேன்னு சண்டைக்கு வராதீங்க..

பதிவுலகம் என் தோழி மஹிமா மூலம் 1996ல் அறிமுகம் ஆனது..
நான் முதலில் படித்தது விசித்ரா மாணிக்கம் அவர்களுடையது.. அது என்னை வெகுவாக கவரவே நானும் எழுத ஆரம்பித்தேன்..

எனது எண்னங்களுக்கு ஒரு வடிகாலாக பதிவுகள் அமைந்தது..
மொக்கைகள் இருக்கக் கூடாது என்பதில் நான் கண்டிப்புடன் இருந்தேன்..
பின்னர் என்க்கும் பதிவு போதை வந்தது என்பது வேறு கதை..

என்றும் எனக்கு தூண்டுகோலாக இருக்கும் என் நண்பன் நாகராஜன் எனது எழுத்துக்கும் தூண்டுகோலாக இருக்கிறார்.. (நீ எப்போடா எழுத போற??)

நண்பர் பால்ராஜ்க்கும் எனக்கும் இப்போதெல்லாம் பதிவுகளில் தான் சண்டையே..

நாங்கள் Prof. என்று பெருமையுடன் அழைக்கும் ரஞ்சித் எழுதும் பதிவுகள் பல என் சிறிய மூளைக்கு எட்டுவதில்லை.. (all are going well over my head)

அவ்வப்போது எனது பதிவுகளைப் படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் அபர்னா..

பதிவுகளின் மூலம் அறிமுகமான, அதிஷா, சகா கார்க்கி, பாலச்சந்தர், விநோத, டோன்டு ராகவன், தாமிரா, Sriமதி, அண்ணா என்று பாசத்துடன் அழைக்கும தூயா மற்றும் என்னைத் தம்பியாக பாவிக்கும் அண்ணன் அப்துல்லா...

பதிவுகள் குறித்து அவ்வப்போது என்னுடன் சண்டையிடும் நண்பர் ரமேஷ்..

என்றும் எப்போது மௌனமாக இருக்கும் என் வருங்கால தங்கமணி..

not to forget my friend Vaishav.. who always gives constructive criticisms..

50வது பதிவு எழுதும் இத்தருனத்தில் எல்லாருக்கும் எனது கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்..

நன்றி!!
நன்றி!!
நன்றி!!
Related Posts with Thumbnails