நண்பர் பால்ராஜ், இவன இப்படியே விட்டா எழுதறதயே மறந்துவிடுவானென்று இந்த தொடர் பதிவில் என்னை இழுத்துவிட்டுட்டார்.. இந்த தொடரும் எனது மனதில் இருந்த பதிவுக்கு சிறிது ஒத்துப்போவதால்.. இங்கே..
1. உங்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
அ. செந்தில் குமார்... இது தானுங்க கவர்மெண்டுல நம்ம முகவரி.. செந்தில்/சென் - நட்பு வட்டத்தில் இந்த பெயர்.. மிகச்சமீபத்தில் நானே ஆசையா மாற்றியமைத்துக் கொண்டது.. செந்தில் குமார்.அசோக்.. அம்மா மற்றும் அப்பா ஆசையா பையானு தான் கூப்பிடுவாங்க.. அவங்க வேற எதும் சொல்லி கூப்பிடது போல எனக்கு ஞாபகமே இல்லை..
செந்தில்.. இது என் தாத்தா ஆசையா வைத்த பெயர் என்று அம்மா ஒரு முறை சொல்லி இருக்காங்க.. எங்க குடுபத்தில் எல்லாருக்கும் குமார்/குமாரி ஒட்டிக்கும்.. எனக்கும் ஒட்டிகிச்சு..
ஒவ்வொரு மனிதனுக்கும், உலகத்திலேயே அவனுக்கு இனிமையா கேட்குற சொல் அவன் பெயர் தான்.. அப்படி இருக்கும் போது, என் பெயர் எனக்கு பிடிக்காம போய்டுமா?? ரொம்ப பிடிக்கும்..
(குமாரு:: டேய்ய் உனக்கு பள்ளி பருவத்துல நண்பர்கள் வச்ச பேரு மறந்துபோச்சா??)
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
அவ்வப்போது..
3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
நம்ம கையெழுத்துக்கு நிறைய ரசிகர்களே உண்டு.. அட ஆமாங்க.. உண்மையத் தான் சொல்லறேன்.. ஆனா என்னைப் பொறுத்தவரை என் கையெழுத்து கொஞ்சம் கொஞ்சம் நல்லா இருக்கும்.. ஆனா பாருங்க பல நேரங்களில் கேவலமா இருக்கும்.. அது ஏனோ தெரியல, நம்ம கையெழுத்து always depends on the pen i use and the surface.. :-( (குமாரு:: உன் கையெழுத்த படிக்கறது எங்க தலைஎழுத்து, இதுல உனக்கு ரசிகள் இருக்காங்கன்னு ஏண்டா இப்படி பீலா விடற?)
4. பிடித்த மதிய உணவு என்ன?
காலை/மதிய உணவு.... அப்படி பிரிச்சு பாக்கறது இல்ல.. தஞ்சையில் அம்மா சமையல் சாப்பிடும் போது, அவங்களே பார்த்துக்குவாங்க.. இப்போ சென்னையில அந்த வேளை எது சாப்பிடனுமுனு தோணுதோ அத சாப்பிட்டுட்டு போய்டறது.. (ஒரு ஓட்டல் நடத்தறவன் பேசுற பேச்சா இதுன்னு குமாரு தலையில அடிச்சுக்கறான்)
பிகு: நமக்கு சாப்பாட்டுல நாட்டமில்லைன்னு மட்டும் யாரும் தப்பா நினைச்சுடாதீங்க.. அக்மார்க் தஞ்சாவூர்காரன்.. நல்லா வக்கன்னையா ரசிச்சு ருசிச்சி எல்லாத்தையும் வெட்டுவோம்ல.. அட ஒரு டம்ளர் சூட சுவையா காபி போதுங்க.. அதுக்கு ஈடு வேறு இல்லை..
5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நான் என்ன பத்தி ரொம்ப பெருமையா நினைத்துக்கொள்ளும் ஒரு விஷயம், எனக்கு வேண்டாதவங்க, என்னை பிடிக்காதவங்க, எனக்கு பிடிக்காதவங்க என்று இதுவரை கடவுள் புண்ணியத்தில யாரும் இல்ல..
(குமாரு:: டேய் அவங்க என்னா கேட்டாங்க, நீ என்னா சொல்லற??)
6. கடலில் குழிக்க பிடிக்குமா.. அருவியில் குளிக்க பிடிக்குமா??
யாரு குளிக்கறத பற்றி கேட்கறீங்க??
ஓ நான் குளிக்கறதா?? அருவி தான் நம்ம சாய்ஸ்.. சும்மா மடமட நீர் மேல வந்து விழுமே அப்போ அடையற சுகமே தனி.. ஒன்னுமே செய்யாம அப்படியே நின்னுகிட்டு இருக்கனும்.. ம்ம்ம்ம்
கடல்.. அமைதியா மணலில் உட்கார்ந்து, ஆர்ப்பரிக்கும் கடலை பார்த்துட்டே இருக்கனும்..
எதையோ தொலைத்து தேடற ஒரு பரபரப்பு காட்டுமே அலைகள், அதுகிட்ட அது எதை தஒலைச்சதுன்னு கேட்டு கண்டுபிடிச்சு குடுக்கணும்..
(குமாரு:: நாட்டாம, இவன்கிட்ட கேள்விய மாட்தி கேளு.. “குளிக்க பிடிக்குமா?” அப்படி கேளு..)
7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவணிப்பீர்கள்??
யாரை எதுக்கு பார்கிறோம் என்பதைப் பொறுத்தது அது..
பேசும் போது பெரும்பாலும் கண்கள் தான்.. அது தான் அவங்கள பத்தி நமக்கு சொல்லும்..
(குமாரு:: அப்போ சிறும்பாலும் எத பார்த்து பேசுவ??)
8. உங்ககிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன??
பிடித்தது:: எனக்கு பிடிக்காத விஷயங்களையும் பல நேரங்களில் அடுத்தவங்களுக்காக செய்யறது.. அத மகிழ்ச்சியா எடுக்கறது..
பிடிக்காதது:: ஆவ்வ்வ்வ்வ்... சோம்பலா இருக்கு.. அப்புறமா சொல்லட்டுமா??
(குமாரு:: முதல்ல மத்தவங்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காதுன்னு கேட்டு உறுப்படற வழிய பாரு)
9. உங்க சரி பாதிகிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது??
பிடித்தது:: நீண்ட நெடிய கால்கள்..
பிடிக்காத்து:: கால் கட்டை விரல் இரண்டும் கொஞ்சம் வளைந்து இருக்கும்..
சரி பாதினா என் கால்களைத் தானே கேட்குறீங்க??
(குமாரு:: நீ உறுப்படவே மாட்ட)
10. யார் பக்கத்துல இல்லாம இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்??
இதை நான் சாய்ஸ்ல விட்டுடறேன்..
11. இதை எழுதும்போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
சேப்பு..
12. என்ன பார்த்து, கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்??
அழகா கறுப்பு சட்டை போட்டு.. வெள்ளை உள்ளாடை வெளியில் தெரிய கலக்கலா இருக்கற என் கணிணி.. (வேற எத்த பார்க்கறது.. )
Mr. கந்தசாமியும் Ms. சுப்புலச்சுமியும் போடி.. போடான்னு சண்டை போட்டுகிட்டு இருக்கறத கேட்டுட்டு இருக்கேன்..
13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக மாற ஆசை?
வெள்ளை வர்ணம்..
வெள்ளை வர்ணப் பேனாவை நாம் மிக அரிதாகத் தான் பயன் படுத்துவோம்..
அப்படி நானும் ஒரு அரிதான பொருளாக ஆக ஆசை..
(என்ன ஒரு வில்லத்தனமான ஆசை - குமாரு)
14. பிடித்த மணம்?
(என்ன ஒரு வில்லத்தனமான ஆசை - குமாரு)
14. பிடித்த மணம்?
நாம நெம்ப நேடிவிட்டியான ஆளுங்க.. நமக்கு பிடித்ததுலாம் பின்வருமாரு..
மண்வாசனை (பாரதிராசாது இல்லங்க)..
சுண்ணாம்பு செவுத்துல தண்ணீர் ஊற்றினால் வரும் சுண்ணாம்பு வாசனை..
Old Spice after shave lotion வாசனை..
15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
சாரி.. நான் யாரை இதுல அழைக்கப் போவது இல்லை..
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
எல்லாமே பிடிக்கும்.. சிறு சிறு கருத்து வேறுபாடுகளுடன்...
எல்லாமே பிடிக்கும்.. சிறு சிறு கருத்து வேறுபாடுகளுடன்...
(குமாரு:: என்னடா இது இப்படி பால்ராஜ காக்கா பிடிக்கர? என்ன மேட்டர் எனக்கு தெரியாம??)
17. பிடித்த விளையாட்டு?
சாலிடர், ஸ்பைடர் சாலிடர், ஃப்ரீ செல், ரோட் ராஷ், மினி கோல்ஃப்.. இது எல்லாம் கணினியிலும், என் அலை பேசியிலும் விளையாட நெம்ப பிடிக்கும்..
சாலிடர், ஸ்பைடர் சாலிடர், ஃப்ரீ செல், ரோட் ராஷ், மினி கோல்ஃப்.. இது எல்லாம் கணினியிலும், என் அலை பேசியிலும் விளையாட நெம்ப பிடிக்கும்..
(குமாரு:: என்டா டேய்?? ஏன் இப்படி??)
18.கண்ணாடி அணிபவரா?
ஆமாம்..
வெய்யுலுக்கு, இரவுக்கு என்று தனித்தனியாக இரண்டு என் அம்மனி வாங்கி தந்தது..
(குமாரு:: சரி.. சரி..)
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
இது தான் பிடிக்கும் ஒரு வரைமுறை கிடையாது.. மொத்தத்தில் திரைப்படம் பிடிக்கும்
இது தான் பிடிக்கும் ஒரு வரைமுறை கிடையாது.. மொத்தத்தில் திரைப்படம் பிடிக்கும்
20.கடைசியாகப் பார்த்த படம்?
முத்திரை.. நேத்து தான் பார்த்தேன்.. இன்னைக்கு Angels & Demons பார்க்கனும் என்று நினைத்துள்ளேன்..
முத்திரை.. நேத்து தான் பார்த்தேன்.. இன்னைக்கு Angels & Demons பார்க்கனும் என்று நினைத்துள்ளேன்..
(குமாரு:: அப்படியே நீ முடிவு செய்த மாதிரி பார்த்துட்டாலும்.. )
21.பிடித்த பருவ காலம் எது?
பருவ காலமே ஒரு வசந்த காலம் தான்..
பருவ காலமே ஒரு வசந்த காலம் தான்..
(குமாரு:: இவன் இப்படி தான்ங்க.. நீங்க ஒன்னு கேட்டா, இவன் ஒன்னு சொல்லுவான்..)
22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
உடையார்.. பாகம் 4
(குமாரு:: அதை கையில எடுத்தே பல மாசம் ஆகுதுங்க.. )
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
இப்போதுமே நாம்ம டெஸ்க்டாப் அழகா கருமையா இருக்கும்..
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது:: “பையா” என்று என் அப்பாவும், அம்மாவும் அழைத்தது, அழைப்பது.. “என்னப்பா” என்று என்னவள் கேட்பது.. இன்னும் நிறைய இருக்குங்க..
பிடிக்காதது:: சத்தம்.. எல்லாமே ஒரு இசை தானுங்களே.. இசை பிடிக்காதவங்க யாராவது இருக்காங்களா?? மற்றபடி, வண்டியில போகும் போது பின்னாடி வந்து ”ஙேஙேஙேஙே” என்று அலறும் சத்தம்..
(குமாரு:: ஒரே சமையத்துல உன்னால மட்டும் தான் உணர்வாகவும், கேனத்தனமாவும் பேச முடியும் டா.. )
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அதை எப்படி கணக்கு போடுவது என்று தெரியங்க..
(குமாரு:: எதுடா? எதுன்னே சொல்லாம இப்படி ஒரு கேள்வி கேட்டா என்ன அர்த்தம்??)
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
நிறைய உண்டு..
இங்க வைரமுத்துவின் ஒரு கவிதை ஞாபகம் வருது..
“ரோஜாவோடு மல்லிகையையல்ல
ரோஜாவோடு ரோஜாவையே
ஒப்பிடாதே..
ஒவ்வொன்றுக்கும் சுயம் உண்டு”
(குமாரு:: இது ஒன்னு தான் நீ உறுப்படியா சொன்னது)
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நிறைய இருக்கு... அத விடுங்க....
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோவம்..
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
Miles to go before I sleep..
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்படியே செந்திலாக..
31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
இப்போ சொல்ல தெரியலயே... கன்னாலத்து அப்பால சொல்லறேன்..
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
இன்னும் அதற்கான அனுபவம் வரலீங்க...